Saturday 22 March 2014

கால்நடைகளில் மரபுவழி மருத்துவம்

தமிழர்கள் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே கால்நடைகளை வளர்த்து வருகிறார்கள். பசுவை செல்வத்தின் சின்னமாகவும் உற்பத்தியின் அடையாளமாகவும் வழிபடுதல் தமிழர்களின் வாழ்வியல் வழியாகும்.

மனிதன் பிறந்தது முதல் அவனுக்குப் பால் புகட்டப்படுகிறது. இறந்த பிறகும் எரித்த அல்லது புதைத்த இடத்தில் பால் ஊற்றப்படுகிறது. வாழ்விலும் சாவிலும் இணைபிரியாதது பால். பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் எல்லா நேரங்களிலும் உண்ணப்படுகின்றன.

தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் பசு சாஸ்திரம், பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல கஜ சாஸ்திரம், அஸ்வ சாஸ்திரம் முதலான பல நூல்களில், அவற்றின் மரபுவழி சிகிச்சைக்காக என்னென்ன மூலிகைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று தெளிவாகப் பதிப்பித்து வைத்துள்ளார்கள்.

கிராமப்புறங்களில் ஏழை, எளிய மக்களில் சுமார் 70 சதவீதத்தினர் கால்நடைகளின் துணைப் பொருள்களைக் கொண்டே வாழ்க்கை நடத்துகின்றனர். உலகக் கால்நடையில் 20 விழுக்காடு இந்தியாவில்தான் உள்ளது.

இன்றைக்கும் கிராமங்களில் பசு, கன்று ஈன்றவுடன் இளம் மூங்கில் தழைகளைத் தின்னக் கொடுப்பார்கள். அந்தத் தழைகளைத் தின்ற 3 மணி நேரத்தில் நஞ்சுக்கொடி கருப்பைப்பிடிப்பிலிருந்து தொடர்பை விலக்கி விட்டுவிடும். உடனே அப்படியே எடுத்துவந்து முருங்கை மரத்தின் அடியில் புதைத்து அதையும் உரமாக்கிவிடுவார்கள். ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உதவும்.

வயலில் நெல் அறுக்கின்றபோது ஒரு பழமொழி சொல்வார்கள், ""நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு'' என்று. மாட்டுக்கு வைக்கோல் இடுவதைத்தான் அப்படிக் குறிப்பிடுவார்கள். மாட்டின் கழிவு சாணம், மீன்களுக்கு உணவாகப் போடப்படுகிறது. மீன் மனிதனுக்கு உணவாகிறது. மனிதக் கழிவு மண்ணுக்கு உரமாகிறது.

உயிர்ச்சங்கிலியின் ஒவ்வொரு தொடர்பும் இயற்கையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலவழி மருத்துவப் படையெடுப்பால் மரபுவழி மூலிகை மருத்துவம் வழக்கொழிந்து போனது. தஞ்சையில் இயங்கிவரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கால்நடை மருத்துவ மூலிகைகளை உழவர் பயிற்சிகளில் அறிமுகப்படுத்துகிறார்கள், பயன்பாட்டுக்குக் கொண்டுவருகிறார்கள். கிராம கால்நடைக் காப்பாளர்களுக்கு தொடர்ந்து பத்தாண்டுகளாக மாதந்தோறும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆண்டுகள்தோறும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடைபெறுகின்றன.

கால்நடைகளில் கோமாரி நோயைக் குணப்படுத்த தமிழ்நாடு அரசு கோடிக்கணக்கில் செலவிடுகிறது. இன்றும் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் இல்லாத கிராமங்களில், ஒரு முற்றிய தேங்காய்த் துருவலோடு மஞ்சளையும் வேப்பிலையையும் சம அளவு அரைத்துக் கொடுத்து குணப்படுத்துகிறார்கள்.

சினைக்கு வராத மாடுகளுக்கு தொடர்ந்து ஒரு மாதம் சோற்றுக்கற்றாழை மடல்களைக் கொடுத்து பருவமடைய வைக்கின்றனர். மாடுகளின் மலட்டுத்தன்மையை நீக்க, ஆனை நெருஞ்சி தழைகளைக் கொடுத்து குணப்படுத்துகின்றனர். கால்நடைகளின் சுவாசக் கோளாறுகளுக்கு ஆடாதொடை இலைகளையும் ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி தழைகளையும் தூதுவளைத் தழைகளையும் பயன்படுத்துகின்றனர்.

கால்நடைகளின் கழிச்சல் நோய் குணமாக கொய்யா மரத்தின் இலைகளைக் கொடுத்தும் மாதுளம் பிஞ்சுகளைக் கொடுத்தும் குணப்படுத்துகின்றனர்.

செரிமானக் கோளாறுகளுக்கு இஞ்சி, உப்பு அல்லது சுக்கு, பிரண்டை பயன்படுத்துகின்றனர். காயங்களை ஆற்றுவதற்கு குப்பைமேனி, திருநீற்றுப்பச்சிலைகளைக் கசக்கித் தடவுகின்றனர்.

ஆடுகளைப் பற்றிய ஒட்டுண்ணிகளை விரட்டத் தும்பைச் செடிகளைப் பயன்படுத்துகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டால் நிலவேம்புப் பொடியைக் கொடுக்கின்றனர். வேம்பும் மஞ்சளும் கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்படுகின்றன. தோல் நோய்களுக்கு மருதாணி இலைகளை அரைத்துத் தடவுகின்றனர்.

விஷக்கடிகளுக்கு அருகம்புல் சாற்றைக் கொடுக்கின்றனர்.

மாடுகளுக்கு மடிநோய் கண்டால் மரபுவழி மருத்துவத்தைக் கடைப்பிடித்தால் ஒராண்டுக்கு சுமார் 3 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். இப்போது ஆங்கில மருத்துவத்தில் ஆன்டிபயாடிக் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி ஒரு வாரத்தில் குணப்படுத்துகிறார்கள். ஆனால் மடியில் செலுத்தப்படும் நஞ்சு, 3 வாரங்களுக்கு கறக்கப்படும் பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்தப் பாலை குடிக்கிறவர்களுக்கு - குறிப்பாக - குழந்தைகளுக்கு பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. பல வீரியமிக்க மருந்துகள் கால்நடைகளின் உடலிலேயே தங்கிவிடுகின்றன.

2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட உணவுப்பொருள் பாதுகாப்புச் சட்டத்தின்படி கால்நடைகளிலிருந்து கிடைக்கும் உணவுப் பொருள்களான பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் மருந்துப் பொருள்களின் எச்சம் கலப்பது குற்றமாகும். கால்நடைகளுக்கு ஆன்டிபயாடிக் ஊசி போட்டால் அதன் பாலை குறைந்தபட்சம் 21 நாள்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.

இப்போது ரசாயன உரங்களின்றி பூச்சி மருந்துகள் அடிக்கப்படாமல் வளர்க்கப்படும் பசுந்தீவனங்களையும் பசுந்தீவனப் புல்லையும் கொடுத்து பராமரிக்கப்படும் பசுவின் பால் லிட்டருக்கு ரூ.40 என விற்கப்படுகிறது. இயற்கை உணவுக்கு எப்போதும் பற்றாக்குறை உள்ளது.

1967-ஆம் ஆண்டு தி.மு.க. முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது ஒரு கால்நடை மருத்துவமனைப் பெருவிழாவில் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை பங்கேற்றார். ""நம் நாட்டு வேளாண்குடிமக்கள் மிகவும் ஏழைகள். அவர்கள் கால்நடை வளர்ப்பதை தங்கள் வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரமாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கால்நடைகளைப் பராமரித்து வருகிறவர்கள். அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே கிடைக்கும் சித்த, ஆயுர்வேத மருத்துவ மூலிகைகளைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்த நீங்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார்.

அப்போது கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநராக இருந்த டாக்டர் மந்திரமூர்த்தி, டாக்டர் எஃப்.டி. வில்சன் முதலானோர் தனியாக ஆணை பிறப்பித்து, அரசு கால்நடை மருத்துவமனைகளில் சுக்கு, சீரகம், மஞ்சள், அதிமதுரம் முதலான மருந்துகளை வாங்கிவந்து அன்றாடம் பயன்படுத்தவைத்தார்கள். மரபுவழி மருத்துவத்தைக் கெüரவக் குறைவு என்று கருதியோ என்னவோ கால்நடை மருத்துவர்கள் பிறகு கைவிட்டுவிட்டார்கள்.

மூலிகை வளம் - குப்பைமேனி!

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே.... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
இந்த இதழில் வீதியெங்கும் விளைந்து கிடக்கும் குப்பைமேனி பற்றி அறிந்து கொள்வோம்...
'குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, 'சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே... அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பைமேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களிலெல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி... மனிதனைக்  காக்கும் அற்புத மூலிகை என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

குப்பையான மேனியைக் குணப்படுத்தும்!
'உணவே மருந்து... மருந்தே உணவு’ எனச் சொன்ன முன்னோர்களின் அறிவை, கை கொள்ளாததன் விளைவு, பல்வேறு பிணிகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது, நம் உடம்பு. இப்படி, நோயால் குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால்தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்திருக்குமோ... என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது, இதன் பயன்பாடு. குப்பைமேடுகளில் வளர்வதால்... இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பூனைவணங்கி!
இதை, 'மார்ஜால மோகினி’ என வடமொழியில் அழைக்கிறார்கள். 'மார்ஜாலம்’ என்றால் பூனையைக் குறிக்கும்.

'பூனைவணங்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. 'குப்பைமேனியில் உள்ள கந்தகச்சத்து, பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால், அதன் அருகில் வரும்போது பூனையானது கண்களை மூடிக் கொள்ளும். அதேசமயம், ஆரோக்கிய குறைவான உணவை உண்பதால் பூனைகளுக்கு ஏற்படுகிற நஞ்சினை நீக்குவதற்கான மருந்து, குப்பை மேனியில்தான் இருக்கிறது. எனவே, கந்தகத் தாக்குதல் குறைவாக இருக்கும் இரவு வேளைகளில் சென்று, குப்பைமேனி இலைகளை பூனைகள் உண்ணும். அதனால்தான் பூனைவணங்கி என்று பெயர் வந்தது' என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
குப்பைமேனி சிறுசிறு கிளைகளுடன் உள்ள அடர்த்தியான செடி. இலையின் ஓரங்கள் ரம்பத்தின் பற்களைப் போன்று இருக்கும். பச்சை நிறத்தில் மிளகு போன்ற காய்கள் இதில் காய்க்கும். இது, விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் இலைகளின் அமைப்பே வித்தியாசமானது. மாற்றடுக்கில் அமைந்துள்ளதால், உச்சிவெயில் நேரத்தில் ஓர் இலையின் நிழல், அடுத்த இலையின் மீது விழாது.
குடற்புழு நீக்க மருந்து!
குப்பைமேனி குணமாக்கும் நோய்களின் எண்ணிக்கை ஏராளம். இதன் இலை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்பாடு நிறைந்தவை. குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி, அப்படியே நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்... பேதியாகி மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். இலையை பொடி செய்து சாப்பிட்டும் பூச்சிகளை வெளியேற்றலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அற்புதத் தீர்வு, இதன் இலையும், வேரும். குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு ஆங்கில மருந்துக்கடையில் ஒரு குப்பியை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதைவிட குப்பைமேனி இலையை அரைத்து சாறெடுத்து, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தாலே போதுமானது.

வயது வித்தியாசமின்றி பலரும் இன்று மூல நோயால் அவதிப்படுகிறார்கள். காரமான உணவு உண்பது; சரிவிகித உணவாக இல்லாமல் புரதம் நிறைந்திருக்கும் உணவை மட்டும் உண்பதால் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவைதான் மூல நோய்க்கு முக்கியமான காரணங்கள். இந்நோய்க்கு எளிதான தீர்வு, குப்பைமேனி.
அறுவை சிகிச்சைக்கும் அசைந்து கொடுக்காத மூலத்தை, நிர்மூலமாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு இருக்கிறது. குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட் களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால்... ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும்.  
தோல் நோய் குணமாகும்!
ஆஸ்துமா, சைனஸ்... போன்ற  நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் குப்பைமேனி இலைக்கு உண்டு. இது, உடலில் வெப்பத்தை உண்டாக்கி, நாள்பட்ட கோழையைக்கூட வெளியேற்றி விடும். இலையை உலர்த்தி சூரணம் செய்து, சின்ன நெல்லிக்காய் அளவு தேனில் கலந்து கொடுத்து வந்தால்... இருமல், இரைப்பு, கபம் குணமடையும். சொறி, சிரங்கு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு, குப்பைமேனி தைலத்தை
15 நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால்... 'ஸ்கின் பிராப்ளமா... எனக்கா?’ எனக் கேட்கும் அளவுக்கு 'அடடா’ மாற்றத்தை உணர்வீர்கள். இப்படி, தலைவலி, வாத நோய், படுக்கைப் புண்கள்... என இது தீர்க்கும் நோய்கள் ஏராளம், ஏராளம். தான், குப்பையில் வளர்ந்தாலும் மனிதர்களின் நோய்களை அறுக்கும் குப்பைமேனி ஆராதிக்கப்பட வேண்டிய ஒன்று.

Saturday 8 March 2014

வெட்டிவேர்





வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும். நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும். வேர் கொத்துக்கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டிவேர் என வழங்கப்படுகிறது. இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது. இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம். வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும். இது லெமன்கிரேஸ், பாம்ரோசா புல் போன்று வளரும். வெட்டி வேர் மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.
நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத்தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள். வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள். இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி போன்றவற்றை தயாரிக்கிறார்கள். வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மருத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர்செய்வது என்று பார்ப்போம். இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம். மணல்பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
இன்றைய நிலவரப்படி ஒரு டன் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலைபோகின்றது. மூலிகை எண்ணெய் தயாரிப்பவர்களும் வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக்கொள்ள தயாராக உள்ளனர். செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரை மட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம். 12 மாதங்களில் இருந்து 14 மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.
ஒரு ஏக்கருக்கு 12,000 முதல் 15,000 வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிட வேண்டியதுதான். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்தமுறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம். மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம். ரசாயன உரம் தேவையில்லை. பூச்சிமருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது. பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சிவிரட்டியாகவும் செயல்படும். வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம்.
அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது. கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும். மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்துகளை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப்பிறகு 13ம் மாதத்தில் அறுவடைதான். 


இயற்கை முறையில் சாகுபடி செய்துவரும் ராஜகோபாலன் கூறுவது:

இது ஒரு லாபகரமானபயிர்.

இதற்கு அதிக ஆள் தேவையில்லை.

அதிக தண்ணீர் தேவையில்லை.

அதிக வெயில் தேவையில்லை.

அப்படியே அதிக தண்ணீர், அதிக வெயில் இருந்தாலும் அதனால் பெரிய பாதிப்பு இல்லை.

வெட்டிவேர் புல்லானது நல்ல மருத்துவகுணம் உள்ளதால் இதற்கு சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது.

பயிர் செய்வதற்கு தேவையான இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட 50,000 வெட்டிவேர் நாற்றுகள் விலைக்கு உள்ளன.

வேண்டுவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: வீ.ராஜகோபாலன்,

ஸ்ரீதேவி மெடிக்கல்ஸ், திருவளப்பாடி, அத்தாணி, அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை-614 630. அலைபேசி எண்: 04371244 408.

நன்றி: தினமலர்

வெட்டிவேர் புல் இனத்தைச் சேர்ந்தது. இது பெரும்பாலும் மணற்பாங்கான இடங்களிலும், ஆற்றுப் படுகைகளிலும் சிறப்பாக வளரும்.

நாணல் மற்றும் தர்ப்பைப் புற்களைப் போல் வளரும். இது நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.

வேர் கொத்துக்கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டிவேர் என வழங்கப்படுகிறது.

இதன் வேர் கருப்பு நிறமாக மணத்துடன் இருக்கும். இதனை பெண்கள் மணத்திற்காக தலையிலும் அணிவதுண்டு. இது உடலின் வேர்வையும் சிறுநீரையும் பெருக்கி வெப்பத்தை அகற்றி உடலுக்கு உரமாக்கியாகவும் செயல்படுகிறது.

இதை ஒரு வருடத்தில் வெட்டி எடுக்கலாம்.

வேர் குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது. இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டு முதல் நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லும்.

இது லெமன்கிரேஸ், பாம்ரோசா புல் போன்று வளரும்.

வெட்டி வேர் மண் அரிப்பைத் தடுக்கும். மாடுகள் இதன் புல்லைத் தின்னும்.
நம் முன்னோர்கள் வெட்டிவேர் ஊறப்போட்ட சில்லென்ற பானைத்தண்ணீர், வெக்கையை விரட்டி அடிக்க வெட்டிவேர் தட்டி என்று அதன் மகிமையை முழுவதுமாக உணர்ந்திருந்தார்கள்.

வெட்டிவேர் ஊறிய தண்ணீரைக் குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் என்றும் கூறுகிறார்கள்.

இக்கால விஞ்ஞானிகள் வெட்டிவேர் கொண்டு பாய், காலணி, தலைக்குத் தொப்பி போன்றவற்றை தயாரிக்கிறார்கள்.

வெளிநாட்டவர் பலரும் அதன் பயனை அடைகிறார்கள். இத்தகைய மருத்துவம் வாய்ந்த வெட்டிவேரை எப்படி பயிர்செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு எத்தகைய மண்ணாக இருந்தாலும் பாதகமில்லை.ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு டன் வேர் நிச்சயம்.

மணல்பாங்கான நிலமாக இருந்தால் வேர் நன்கு இறங்கி விவசாயிகளுக்கு நல்ல மகசூலைத் தரும். இரண்டு டன்னுக்கு மேலும் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.

இன்றைய நிலவரப்படி ஒரு டன் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலைபோகின்றது. மூலிகை எண்ணெய் தயாரிப்பவர்களும் வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்களும் உடனடியாக வாங்கிக்கொள்ள தயாராக உள்ளனர்.

செடியை வேர் அறுபடாமல் பிடுங்கி எடுத்து, மேலே உள்ள பச்சை செடியை நீக்கிவிட்டு, வேரை மட்டும் மண் போக அலசி, உலர்த்தி கொடுப்பது அவசியம். 12 மாதங்களில் இருந்து 14 மாதங்களுக்குள் அறுவடை செய்துகொள்ளலாம்.

ஒரு ஏக்கருக்கு 12,000 முதல் 15,000 வரை நாற்றுகள் தேவைப்படும். ஒரு நாற்று 60 பைசாவிற்கு வாங்கி பயிரிட வேண்டியதுதான். முதல்முறை மட்டும்தான் இந்த செலவு. அடுத்தமுறை நம் நிலத்தில் இருந்தே நாற்றுகள் எடுத்துக்கொள்ளலாம்.மிகுதியாக உள்ளதை தேவையானவர்களுக்கு விற்றுவிடலாம்.

ரசாயன உரம் தேவையில்லை. பூச்சிமருந்து தேவையில்லை. வெட்டிவேர் செடியே பூச்சிகொல்லியாக செயல்படுகிறது.

பெரிய காய்கறித்தோட்டம் வைத்திருப்பவர்கள் ஊடுபயிராகவோ வரப்புகளிலோ நெருக்கமாக நட்டுவிட்டால் அதுவே பூச்சிவிரட்டியாகவும் செயல்படும்.

வேரை விற்று வரும்படியும் பார்க்கலாம்.

அதிக தண்ணீரும் இதற்கு தேவையில்லை. வாரம் ஒரு முறை தண்ணீர் விட்டாலே போதுமானது.

கரும்பு நடுவதுபோல் நடவேண்டும். பார்ப்பதற்கு உலர்ந்தாற்போல் இருந்தாலும் நாற்று நட்ட பதினைந்திலிருந்து இருபத்தி ஐந்து நாட்களுக்குள் பச்சை பிடித்துவிடும்.

மூன்று மாதங்கள் கழித்து கால் மாற்றிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்துகளை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குப்பிறகு 13ம் மாதத்தில் அறுவடைதான்.

தொடர்புக்கு: எம்.அகமதுகபீர், 268/77, பழைய ஹவுசிங் யூனிட், எல்லீஸ் நகர் (அஞ்சல்), தாராபுரம்-638 657.

-எம்.அகமது கபீர், வேளாண்மை ஆலோசகர், அக்ரி கிளினிக், 09360748542.

Saturday 1 March 2014

Bamboo Leaves in Feed Increase Chicken Weight



Feeding chickens on an organic diet containing fresh bamboo leaves results in them weighing up to 70% more than those fed on standard organic diets, according to results from INBAR’s Action Research Site in Abra Province, The Philippines. The results suggest that the fibre in the bamboo leaves enlarges the digestive tract and enables the chickens to consume more and to grow faster.

Testing method

At an organic chicken farm run by the project (the Bambu Organic Natural Farm), one-day-old organic chicks were sourced from a certified supplier and split into two test and two control batches that were treated as follows.

The two control batches were fed a standard organic diet of fermented vegetables, corn, muscovado and fermented fish.
The five test batches were fed a standard organic diet of fermented vegetables, corn, muscovado and fermented fish, with bamboo leaves added.

Young bamboo leaves were harvested by hand on a daily basis to ensure freshness, from a widely-grown Bambusa species known locally as “bayog”. If supplies of bayog were not readily available, another commonly-growing species, Bambusa blumeana (“kawayan tinik”), was substituted. The bamboos grow naturally within the chicken farm itself and are not cultivated, and hence organic. The leaves were chopped very finely and mixed into the standard chick feed from day one to day seven. For the older chickens (days eight and onwards), fresh bamboo leaves were made available for them to peck at; the leafy branches were pruned from the bamboos and placed on the ground throughout the ranging area.

The graph of results shows a huge improvement in the weights of the chickens fed on bamboo, with them being 70% heavier by the fifty-sixth day.


http://www.inbar.int/2012/03/bamboo-chicken-feed/