Sunday 13 July 2014

அமிர்த்த கரைசல்:

தயாரிப்பு முறை: மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம்?இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டுஅதில் ஒருகைப்பிடிவெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார். ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம்.
அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும்போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம். (தகவல்: இயற்கை வேளாண்மை, அ முதல் ஃ வரை, பொன்.செந்தில்குமார்)

Monday 7 July 2014

மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு

மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு
வெற்றிலை, மிளகு, மஞ்சணத்தி இலை தின்னக் கொடுக்க வேண்டும். பிரண்டை ஒரு கை பிடியளவு எடுத்து இடித்து கல் உப்பை சேர்த்து நாவில் தேய்த்து பிரண்டை சாறு உள் கொடுக்க இரை தின்னும்
கழிச்சலுக்கு மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு
வெற்றிலை, மிளகு, மஞ்சணத்தி இலை தின்னக் கொடுக்க வேண்டும்.
பிரண்டை ஒரு கை பிடியளவு எடுத்து இடித்து கல் உப்பை சேர்த்து
நாவில் தேய்த்து பிரண்டை சாறு உள் கொடுக்க இரை தின்னும்
கழிச்சலுக்கு
அவரை இலை 1 பிடி, சின்ன வெங்காயம் 10 கிராம், விடத்தலை
இலை 1 பிடி ஆகிய அனைத்தும் அரைத்து (மாட்டு தொட்டியில்) கழனியில் கலந்து 2 வேளை உள்ளே கொடுக்க வேண்டும்.
மாட்டுக்கு இரை எடுக்காமைக்கு
வெற்றிலை, மிளகு, மஞ்சணத்தி இலை தின்னக் கொடுக்க வேண்டும்.
பிரண்டை ஒரு கை பிடியளவு எடுத்து இடித்து கல் உப்பை சேர்த்து
நாவில் தேய்த்து பிரண்டை சாறு உள் கொடுக்க இரை தின்னும்
கழிச்சலுக்கு
அவரை இலை 1 பிடி> சின்ன வெங்காயம் 10 கிராம், விடத்தலை
இலை 1 பிடி ஆகிய அனைத்தும் அரைத்து (மாட்டு தொட்டியில்) கழனியில் கலந்து 2 வேளை உள்ளே கொடுக்க வேண்டும்.
வயிறு ஊதி கொண்டால்
பெருமருந்து ( வசம்பு) மற்றும் தலை சுருளிக்கொடியை வாய்க்குள் கொடுக்க ஊதிய வயிறு குறைந்து விடும் அல்லது முற்றிய வெற்றிலையுடன் பெருங்காயத்தைச் சேர்த்து, தட்டக்குச்சியில் மடித்து வாய்க்குள் கொடுக்க வயிறு ஊதிக் கொள்ளுதல் குறையும்.