Thursday 23 November 2017

Artificial Insemination for CATTLE

Introduction
Artificial insemination (AI) is a technique in which sperm are collected from the male, processed, stored and artificially introduced into the female reproductive tract at proper time for the purpose of conception. AI has become one of the most important techniques ever devised for the genetic improvement of farm animals. It has been most widely used for breeding dairy cattle and buffalo.


History
The history of the development and use of artificial insemination in domestic animals is a long and varied one.
1300 A.D - The first reported use of AI, although not documented. In Arab countries artificial insemination was carried out in Arab horse breeders. According to an Arabian book published in 14th century; an Arab chief of Darfur put a ball of cotton in the vagina of a mare which was recently bred by a famous stallion belonging to an enemy cheiftan during night time. After 24 hours, he then hurried to home and introduced the cotton ball into vagina his own mare. The mare became pregnant and gave birth of a foal.
1677 - A major technological breakthrough in the study of reproductive physiology was made by a Dutch Scientist named van Leeuwenhoek, who developed a simple microscope. A medical student suggested to van Leeuwenhoek that semen might contain living cells using his microscope; van Leeuwenhoek observed semen and discovered that it contained small particles that moved about. He referred to these particles as “animalcules” and published a paper on his observations in 1677.
1780 - An Italian physiologist, Lazzaro Spallanzani reported first successful use of AI. After success with several amphibian animals, he started experiment with dog. Dogs were confined in his house. When one bitch manifested the signs of heat, he used semen at body temperature to inseminate the bitch. Sixty-two days later she gave birth to three pups. He is also called “Father of modern artificial insemination”.
1803 - Spallanzani reported cooling of semen prolong the sperm life. Further development did not occur for a very long time.
1914 - G. Amantia, professor of human physiology at University of Rome developed the first artificial vagina for collection of semen from dog.
1937 - Danish veterinarians developed the first rectovaginal/cervical fixation method of AI.
1940 - Philips and Lardy developed egg yolk phosphate diluter for preserving fertility and motility of refrigerated bull spermatozoa.
1941 - Salisbury et al. developed egg yolk citrate diluter.
1948 - Sorenson first time used large sized straws (12mm) made up of polyvinyl chloride.
1949 - Polge, Smith and Parkes discovered cryoprotective effect of glycerol in frozen semen technology. This is most important milestone in the history of artificial insemination.
1951 - Steward reported the birth of first calf from insemination with frozen semen in cooperation with Polge and Smith.
1963 - Nagase and Niwa developed the technique of freezing bull semen in pellet form in Japan.
1964 - Cassou improved the straws by reducing their size and named it as medium French straws. The size of the straw was 135 mm long and 2.8 mm diameter with 0.5 ml semen capacity.
1968 - Cassou further reduced the size of the straws to the diameter of 2 mm with a capacity of 0.25 ml and named it as mini French straws.
1974 - Japanese Scientist Nishekawa et al. first time frozen the semen in liquid helium at - 265 Degree C.
1972 - A plastic straw called mini tube or German straws or ‘Lanshut system’ was developed in Germany. These straws are sealed by metallic or glass or plastic balls.
1960 - Adler developed the first technique for freezing of semen in straws using liquid nitrogen vapour.
Work done in India
1939 - In India, first time, AI was done by Sampat Kumaran at "Palace Dairy Farm Mysore”. He inseminated large number of Halliker cows with semen of Holstein Friesian and got 33 cows pregnant.
1942 - A pilot project was started at Indian Veterinary Research Institute (IVRI) to study the feasibility of AI under the guidance of Dr. P. Bhattacharya with the team consisting of Dr. S.S. Prabhu, Dr. D.P. Mukherjee, Dr. S.N. Luktuke, Dr. A roy and Dr. Garjan Singh. This team approved that this technique could be used in Indian Condition since then, this technique has come into general use as a regular practice of breeding for cattle and buffaloes.
1942 - Four regional centers were established at Bangalore, Calcutta, Patna and Montgomery (Now in Pakistan) by Govt. of India.
1943 - The first buffalo calf through AI was born at the Allahabad Agricultural Institute.
1951-1956 - In the first five-year plan (1951-56) the Government of India introduced 150 key village centers to improve cattle and buffaloes in this country.
1956-1961 - The second five-year plan (1956-61) gave a boost to AI work by implanting it in 400 key village centers.
contributed by Pradeep Kumar, Dharmendra Kumar, Indrajeet Singh and Sunesh Central Institute for Research on Buffaloes

Thursday 9 November 2017

கால்நடை இனங்கள்

சாஹிவால் :

* அதிகமாக பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், டெல்லி, பீஹார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராம சூழலில்1350 கிலோ
- வணிக பால்பண்ணை சூழலில்: 2100 கிலோ

* 32-36 மாதம் முதல் கன்று ஈனுகிறது

* கறவை கால இடைவெளி - 15 மாதம்.

கிர் :

* தெற்கு கத்தியவாரில் உள்ள கிர் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.


* பால் உற்பத்தி - கிராம சூழல் : 900 கிலோ
வணிக பால்பண்ணை சூழல் : 1600 கிலோ

தார்பர்கர் :

* ஜோத்பூர், கச் மற்றும் ஜெய்சால்மர் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராமசூழல் :1660 கிலோ
– வணிக பால் பண்ணை: 2500 கிலோ

கரண் ஃபிரி :

ஹோலஸ்டின் பிரிசின் காளையின் விந்தைக் கொண்டு, செயற்கை முறையில் இராஜஸ்தானின் தர்பார்கர் பசுவுக்கு செயற்கை முறையில் விந்தினை செலுத்தி உருவாக்கிய கலப்பின இரகம் கரண்ஃபிரியாகும். தா்பார்க்கர் பசுக்கள் சுமாரான அளவு பால் கறக்கும் பசுக்களாக இருந்தாலும், அவை வெப்பம் மற்றும் ஈரப்பதம் மிகுந்த காலநிலைனய தாங்கும் சிறந்த தன்மை வாய்ந்தவை.

இரகத்தின் சிறப்பியல்புகள் :

* பசுவின் உடல்பகுதி, நெற்றி மற்றும் வால்பகுதி கறுப்பு மற்றும் வெள்ளை நிற பற்றுகள் நிறைந்திருக்கும். மடியானது கறுத்தும், காம்புகளில் வெள்ளை நிறமும், தடித்த பால் நரம்புகளும் காணப்படும.

* இந்த இரகமானது மிக சாந்தமாக காணப்படும். பெண் கன்று, ஆண் கன்றுகளை விட மிக விரைவாக வளர்ச்சியடையும். 32-34 மாத வயதில் கருவுற தொடங்கும்.

* சினை காலமானது 280 நாட்கள் ஆகும். கன்று ஈன்று 3-4 மாதங்களுக்கள் மீண்டும் கருவுற தயாராகும். ஆனால் ஏனைய வட்டார இரகங்கள் கன்று ஈன்று மீண்டும் கருவுற 5-6 மாதம் ஆகும்.

* பால் அளவு : கரண் ஃபிரி பசுக்கள் ஒரு வருடத்திற்கு 3000-3400 லிட்டர் பால் வரை கறக்க வல்லவை. நிறுவன பண்ணையில் இந்த பசு இரகத்தின் சராசரி பால் கறக்கும் அளவானது 3700 லிட்டர் ஆகும். பாலின் கொழுப்பு சத்து அளவு 4.2 சதவிகிதம் ஆகும். இதனுடைய கறனவ நாட்கள் 320 நாட்கள் ஆகும்.

* இந்த இரகத்தினை நிறைய பசுந்தாள் தீவனம் கொண்டும் மற்றும் சரிவிகித செறிவான உணவு கவவைக் கொண்டும் ஊட்டச்சத்து அளித்து வந்தால், ஒரு நாளுக்கு 15-20 லிட்டர் வரை பாலினை அளிக்கும். பாலின் உற்பத்தியானது நாளுக்கு 25-35 லிட்டர் வரை (முக்கிய கறனவ நேரங்களில், அதாவது கன்று ஈந்த 3-4 மாதங்களில்) செல்லும்.

* அதிக கறவை அளிப்பதனால், இந்த இரகமானது பால் மடி வீக்கம் மற்றும் கனிம பொருள் பற்றாக்குறை போன்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதனை முன்னரே கண்டறிந்தால் எளிதில் குணமாக்கலாம்.

சிவப்பு சிந்து :

* பஞ்சாப், அரியானா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒரிசா பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராம சூழல் :1100 கிலோ
– வணிக பால் பண்ணை : 1900 கிலோ

கறவை மற்றும் பண்ணை வேலைக்கான இனங்கள் :

ஓங்கோல் :

* ஆந்திர மாநில நெல்லூர், கிருஷ்ணா, கோதாவரி மற்றும் குண்டூர் மாநிலங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - 1500 கிலோ

* வண்டி இழுப்பதற்கும், உழவிற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

ஹரியானா :

* கர்னால், ஹிசார் மற்றும் குர்கான் மாவட்டங்கள் (ஹரியானா), டெல்லி மற்றும் மத்திய பிரதேசம்

* பால் உற்பத்தி : 1140 - 4500 கிலோ

* வேகமான உழவிற்கும், சாலை போக்குவரத்திற்கும் காளை மாடுகள் ஏற்றதாகும்.

கங்ரெஜ் :

* குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - கிராம சூழல் : 1300 கிலோ
- வணிக பால் பண்ணை : 3600 கிலோ

* 36 - 42 மாதம் முதல் ஈனுகிறது.

* கறவை கால இடைவெளி : 15 - 16 மாதங்கள்

* காளைகள் திடமாகவும், வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்யக்கூடியவை.

டியோனி :

* ஆந்திர மாநில வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.

* பசுக்கள் கறவைக்கும், காளைகள் பண்ணை வேலைக்கும் ஏற்றதாகும்.

பண்ணை வேலைக்கான இனங்கள் :

அம்ரித்மஹால் :

* கர்நாடகாவில் அதிகம் காணப்படுகிறது.

* உழவிற்கும், போக்குவரத்திற்கும் நன்கு ஏற்றதாகும்.

ஹல்லிகார் :

கர்நாடகாவின் டும்கூர், ஹாசன், மைசூர் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

காங்கேயம் :

* தமிழ்நாட்டின் கோயமுத்தூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது.

* உழவிற்கும், போக்குவரத்திற்கும் ஏற்றதாகும். நல்ல கடுமையான சூழ்நிலையை தாங்குகிறது.

அயல்நாட்டு கறவை இனங்கள் :

ஜெர்சி :

* 26 - 30 மாதம் முதல் ஈனுகிறது.

* கறவை கால இடைவெளி : 13 - 14 மாதங்கள்
பால் உற்பத்தி - 5000 - 8000 கிலோ

* ஜெர்சி இனம் ஒரு நாளுக்கு 20 லிட்டர் பால் கொடுக்கிறது.

* ஆனால் ஜெர்சி கலப்பினங்கள் ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது.

* இந்தியாவில், இவ்வினம், வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நன்கு ஒத்து வாழ்கிறது.

Holstein ஹோல்ஸ்டீன் ப்ரிசியன் :

* இவ்வினம் ஹாலந்து நாட்டைச் சார்ந்தது.

* பால் உற்பத்தி 7200 - 9000 கிலோ

* பால் உற்பத்தியைப் பொருத்த வரை, அயல் நாட்டு இனங்களில் இது சிறந்ததாகும். சராசரியாக ஒரு நாளுக்கு 25 லிட்டர் பால் கொடுக்கிறது. ஆனால் கலப்பினங்கள் 10-15 லிட்டர் பால் கொடுக்கின்றன.

* டெல்டா மற்றும் கடலோர பகுதிகளுக்கு ஏற்றதாகும்.

எருமை இனங்கள் :

முர்ரா :

* ஹரியானா, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் அதிகம் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி - 1560 கிலோ

* சராசரியாக ஒரு நாளுக்கு 8 - 10 லிட்டர் பால் கொடுக்கிறது

* ஆனால் முர்ரா கலப்பினங்கள் 6 - 8 லிட்டர் பால் கொடுக்கின்றன.

* கடலோரம் மற்றும் குளிர் பிரதேசங்களுக்கும் ஏற்றதாகும்.

சுர்த்தி :

* குஜராத் மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது.

* பால் உற்பத்தி : 1700 - 2500 கிலோ

ஜப்ராபதி :

* குஜராத் மாநில கத்தியவார் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது

* பால் உற்பத்தி - 1800 - 2700 கிலோ

நாக்பூரி :

* நாக்பூர், வர்தா, அகோலா, அமராவதி மற்றும் யோட்மால் (மஹாராஸ்டிரா)

* பால் உற்பத்தி : 1030 - 1500 கிலோ

கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம்

1. மடி வீக்க நோய் (Mastitis)
2. வயிறு உப்புசம் (Bloat)
3. கழிச்சல்
4. கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease)
5. கோமார் கால் புண் (Foot lesions)
6. விட(ஷ)க்கடி

மடி வீக்க நோய் (Mastitis) :

* கறவை மாடுகளில் மடி வீக்க நோய் பெரும்பாலும் நுண்கிருமி தொற்று மூலமாகவே ஏற்படுகிறது. மாட்டின் மடியானது வீக்கமாகவும், கடினத்தன்மையுடனும், வெப்பம் அதிகரித்தும் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பாலானது திரிந்து வெள்ளையாகவோ மஞ்சள் அல்லது இரத்தம் கலந்தோ காணப்படும். மடியினை நன்கு கழுவி, சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 

சோற்றுக்கற்றாழை-200 கிராம் (ஒரு மடல்), 
மஞ்சள் பொடி-50 கிராம், 
சுண்ணாம்பு-5 கிராம் ( ஒரு புளியங்கொட்டை அளவு)

சிகிச்சை முறை : (வெளிப்பூச்சு)

மேற்கண்ட பொருட்கள் மூன்றையும் ஆட்டுக்கல் உரலில் இட்டு நன்றாக கெட்டியாக அரைத்து பின் ஒரு கை அளவு எடுத்து நீர் விட்டு கரைத்து நீர்த்த நிலையில் கால்நடையின் மடிப்பகுதி முழுவதும் நன்றாக தடவ வேண்டும். நாள் ஒன்றுக்கு 10 முறை என்ற அளவில் மடி வீக்கம் குறையும் வரை பூச வேண்டும்.


வயிறு உப்புசம் (Bloat) :

கால்நடைகளில் உப்புசம் அல்லது நுரையோடு கூடிய வயிறு உப்புசம் தீவன மாறுபாடுகளினால் ஏற்படக் கூடியது. இது மிக எளிதில் செரிக்கக் கூடிய தானிய வகை உணவு மற்றும் ஈரமான பசுந்தீவனங்கள் அதிகமாக உண்பதால் ஏற்படுகிறது.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருத்துவப் பொருட்கள் : 

வெற்றிலை-10 எண்ணிக்கை, 
பிரண்டை-10 கொழுந்து, 
வெங்காயம் -15 பல், 
இஞ்சி -100 கிராம், 
பூண்டு -15 பல், 
மிளகு-10 எண்ணிக்கை, 
சின்ன சீரகம்-25 கிராம், 
மஞ்சள்-10 கிராம்.

சிகிச்சை முறை : (வாய் வழியாக)

சின்ன சீரகம் மற்றும் மிளகினை இடித்து பின்பு மற்ற பொருட்களோடு கலந்து அரைத்து இக்கலவையை 200 கிராம் கருப்பட்டியுடன் (பனை வெல்லம்) கலந்த பின் சிறு சிறு உருண்டைகளாக பிரித்து கல் உப்பு (தேவைப்படும் உப்பு – 100 கிராம்) தொட்டு நாக்கின் மேல் தடவி ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள்ளே செலுத்த வேண்டும்.

கழிச்சல் :

நீர்த்த துர்நாற்றமுடைய கழிச்சல் மாடுகளுக்கு காணப்படும். வால், பின்னங்கால்களில் சாணக்கறை படிந்து காணப்படும். உடலிலுள்ள நீர்ச் சத்து, தாது உப்புகள் அதிகமாக வெளியேறி கன்றுகள் மாடுகள் சோர்ந்து காணப்படும்.

இதை சரிப்படுத்த ஒரு மாடுக்கு அல்லது மூன்று கன்றுகளுக்கு :

சின்ன சீரகம் 10 கிராம், 
கசகசா 10 கிராம், 
வெந்தயம் 10 கிராம், 
மிளகு 5 எண்ணிக்கை, 
மஞ்சள் 5 கிராம், 
பெருங்காயம் 5 கிராம் 

ஆகியவற்றை நன்கு கருகும் வரை வறுத்து அடுத்து நீர்தெளித்து இடித்துக்கொள்ள வேண்டும். மேலும் வெங்காயம் 2 பல், பூண்டு 2 பல், கறிவேப்பிலை 10 இலை, பனைவெல்லம் 100 கிராம் ஆகியவற்றை தனியாக நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த இரு கலவைகளையும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக்கி 100 கிராம் கல் உப்பில் தோய்ந்தெடுத்து மாட்டின் நாவின் சொரசொரப்பான மேல்பகுதியில் தேய்த்தவண்ணம் ஒரே வேளையில் உள்ளே செலுத்த வேண்டும்.

கோமாரி வாய்ப்புண் (Foot & Mouth disease) :

கோமாரி அல்லது கால் – வாய் காணை ஒரு நச்சுயிரி நோயாகும். இது மாடு, ஆடு மற்றும் பன்றிகளைத் தாக்குகிறது. வாயிலும் நாக்கிலும் கொப்புளங்கள் ஏற்படும். எச்சிலானது கம்பி போன்று வழிந்து கொண்டிருக்கும். காலின் குளம்புப் பகுதியில் புண்கள் தோன்றி கால் முழுவதும் வீக்கம் காணப்படும். பாதிக்கப்பட்ட கால்நடைகளின் மடியில் கன்றுகளை பால் ஊட்ட விடுதல் கூடாது. இந்நோய் வராது தடுக்க முறையாக கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுதல் மிக அவசியம்.

ஒரு மாட்டிற்கு தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 

தேங்காய் துருவல் -1 தேங்காய் ( பால் கட்டியது), 
சீரகம் -50 கிராம், 
வெந்தயம் -30 கிராம், 
மஞ்சள் பொடி -10 கிராம், 
கருப்பட்டி (பனை வெல்லம்) -20 கிராம்.

சிகிச்சை முறை – மாடு ஒன்றுக்கு உள் மருந்து : (வாய் வழியாக)

சீரகம், வெந்தயம், மஞ்சள், கருப்பட்டி அரைத்து தேங்காய் துருவலுடன் கலந்து நோய்கண்ட மாடு ஒன்றுக்கு தினமும் இருவேளை குறைந்த பட்சம் 3 நாட்கள் கொடுக்க வேண்டும். ஐந்து நாட்கள் கொடுக்க கால்நடைகள் நன்றாக குணமடைகிறது. மாட்டின் தலையைத் தூக்கிப்பிடித்து இரு கடைவாய் பகுதியிலும் மெதுவாக உள்ளே செலுத்த வேண்டும்.

கோமார் கால் புண் (Foot lesions) :

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 

குப்பைமேனி -100 கிராம், 
பூண்டு-10 பல், 
மஞ்சள்-100 கிராம், 
இலுப்பை எண்ணெய் (அ) நல்லெண்ணெய்-250 கிராம்

சிகிச்சை முறை : (வெளி பூச்சு மருந்து)

முதல் மூன்று பொருட்களை இடித்து இலுப்பை எண்ணெயுடன் கலந்து காய்ச்சி பாதிக்கப்பட்ட கால்நடையின் கால்களை உப்பு, மஞ்சள் கலந்த நீரில் கழுவி ஈரத்தை சுத்தமான காய்ந்த துணியால் ஒற்றி எடுத்து பின் மேற்கண்ட மருந்தை இட வேண்டும்.

விட(ஷ)க்கடி :

விடத்தன்மையுள்ள உயிரினங்களான தேள், குளவி, வண்டு, பூரான், அரணை மற்றும் சிறு பாம்புக் கடியினால் தோலில் தடிப்பு, உடல் வீக்கம், வயிறு உப்புசம், வாயில் நீர் வடிதல், முச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் ஆடுகளில் தென்படும்.

தேவைப்படும் மூலிகை மற்றும் மருந்துப் பொருட்கள் : 

உப்பு -15 கிராம், 
தும்பை இலை -15 எண்ணிக்கை, 
சிறியா நங்கை (இலை), (நில வேம்பு)-15 எண்ணிக்கை, 
மிளகு-10 எண்ணிக்கை, 
சீரகம் -15 கிராம், 
வெங்காயம்-10 பல், 
வெற்றிலை -5 எண்ணிக்கை, 
வாழைப்பட்டை சாறு-50 மி.லி.

சிகிச்சை முறை :

சின்ன சீரகம், மிளகினை இடித்து பின்பு இதனுடன் மற்ற பொருட்களுடன் சேர்த்து அரைத்து இக்கலவையை சிறு உருண்டைகளாக 100 கிராம் கருப்பட்டி (பனை வெல்லம்) கலந்து உப்பில் தொட்டு நாக்கின் மேல் தேய்த்து ஒரே வேளையில் அனைத்து உருண்டைகளையும் உள் செலுத்த வேண்டும்

கறவை மாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை

1. கால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும்
2. சினைபிடிக்காத்தற்கான காரணங்கள்
3. சினைப்பருவ சுழற்சி
4. அறிகுறிகள்
5. கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை வராமல் இருக்க சில துளிகள்

கால்நடைகளில் மலட்டுதன்மை - காரணங்களும் அதற்கான தீர்வுகளும் :

கறவை மாடுகளில் ஏற்படும் மலட்டுதன்மை இந்திய பால் பண்ணைத்தொழிலில், பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஒரு முக்கிய காரணமாகும். சினைபிடிக்காத கறவை மாட்டினை பராமரிப்பது பால்பண்ணை விவசாயிகளுக்கு பொருளாதார சுமையாகும். பெரும்பாலான நாடுகளில் சினை பிடிக்காத மாடுகளை இறைச்சிக்காக அனுப்பி விடுவார்கள்.

கறவை மாடுகளில், 10 - 30 % பால் கறவை காலத்தினை மலட்டுத்தன்மை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் குறைபாடுகள் பாதிக்கிறது. கறவை மாடுகளில் கருவுறும் தன்மையினை அதிகரிக்கவும், கன்று ஈனும் விகிதத்தினை அதிகரிக்கவும் காளை மற்றும் கறவை மாடுகளுக்கு முறையாக தீவனத்தினை அளித்து நோய்கள் இல்லாமலும் பராமரிக்கவேண்டும்.

சினைபிடிக்காத்தற்கான காரணங்கள் :

கறவை மாடுகள் சினைபிடிக்காததற்கு காரணங்கள் பல உள்ளன. மலட்டுதன்மை அல்லது கருவுறாமல் இருப்பதற்கு ஊட்டச்சத்து குறைவு, தொற்று நோய், பிறவிக்கோளாறுகள், பராமரிப்பு குறைபாடுகள் மற்றும் கருமுட்டை வெளிவருவதில் குறைபாடுகள் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இருக்கும்.

சினைப்பருவ சுழற்சி :

பசு மற்றும் எருமை மாடுகளில் சினைப்பருவ சுழற்சியானது 18-21 நாட்களுக்கு ஒரு முறை 18-24 மணி நேரம் இருக்கும். ஆனால் எருமை மாடுகளில் இந்த சுழற்சிக்கான அறிகுறிகள் எதுவும் அதிகமாக வெளிப்படுத்தப்படாமல் இருக்கும். சினைப்பருவ சுழற்சி காலத்தில் விவசாயிகள் மாட்டினை காலையிலிருந்து இரவு வரை 4-5 முறை மிக கவனமாக கண்காணிக்க வேண்டும். சினைப்பருவ காலத்தில் இருக்கும் கறவை மாட்டினை சரியாக கண்டறியாமல் இருப்பது மாடுகளில் மலட்டுத்தன்மைக்கான முக்கிய காரணமாகும். சினைப்பருவ சுழற்சி அல்லது சினை பருவ காலத்தில் இருக்கும் கறவை மாடுகளை கண்டறிதலில் மிகத் திறமை அவசியம். எவர் ஒருவர் தன் கறவை மாடுகளை பற்றிய பதிவேடுகளை பராமரிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு கறவை மாடு வளர்ப்பில் நல்ல இலாபம் கிடைக்கும்.



அறிகுறிகள் :

* மாடுகள் கத்திக்கொண்டே இருக்கும்.

* மற்றொரு மாட்டின் மீது தாவும்.

* கண்ணாடி நிறத்தில், கெட்டியாக திரவம் அறையிலிருந்து வழிந்தோடும்.

* தினமும் கொடுக்கும் பாலைவிட, பாலின் அளவு சற்று குறைவாகவே இருக்கும்.

* மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கும்.

* மாடுகள் வளர்ப்போர் மேற்சொன்ன சினை பருவ அறிகுறிகளை நன்கு தெளிவுற தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கறவை மாடுகளில் மலட்டுத்தன்மை வராமல் இருக்க சில துளிகள் :

* கறவை மாடுகள் சினைப்பருவ காலத்தில் இருக்கும் போதே சினை ஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்க்கவேண்டும்.

* சினைப்பருவத்திற்கு வராத மாடுகளை கால்நடை மருத்துவர் மூலம் சோதித்து அதற்கு மருநத்துவம் அளிக்க வேண்டும்.

* மாடுகள் ஆரோக்கியத்தினை பேண 6 மாதத்திற்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். சரியான இடைவெளியில் செய்யப்படும் குடற்புழு நீக்கத்திற்கான சிறு முதலீடு, பெரும் இலாபத்தை அளிக்கும்.

* கறவை மாடுகளுக்கு அளிக்கப்படும் தீவனம் சக்தி, புரதம், கனிமம், மற்றும் விட்டமின்கள் கலந்த சரிவிகித தீவனமாக இருக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு சரிவிகித தீவனத்தினை கொடுப்பதால் அவற்றின் கருவுறும் தன்மை, ஆரோக்கியமான சினை காலம், பாதுகாப்பான கன்று ஈனல், குறைவான தொற்றுநோய்களின் தாக்கம் மற்றும் ஆரோக்கியமான கன்று பெறுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

* கிடேரி கன்றுகளுக்கு அவற்றின் இளம் வயதிலிருந்தே சரிவிகிதத் தீவனத்தினை அளித்தால் சரியான வயதில் சரியான எடையுடன் (230-250 கிலோ) இனப்பெருக்கத்திறனை அடையும். இதன் மூலம் அவற்றின் கருவுறும் தன்மை அதிகரித்து இனப்பெருக்கத்திற்கும் ஏற்றதாகவும் இருக்கும்.

* சினையாக இருக்கும் போது அதிகமான அளவு பசுந்தாள் தீவனம் அளித்தால் பிறக்கும் கன்றுகளில் குருட்டுத் தன்மையை தடுப்பதுடன் கன்று ஈன்றவுடன் நஞ்சுகொடி கறவை மாட்டின் கருப்பையிலிருந்து போடாமல் இருப்பதையும் தடுக்கும்.

* மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கும் போது அந்த காளைகளின் இனப்பெருக்கத்திறன் பற்றிய விவரங்களை கேட்டறிந்து பின் மாடுகளை இனப்பெருக்கத்திற்காக காளைகளுடன் சேர்க்கவேண்டும்.

* மாடுகளை சுகாதாரமான முறையில் இனவிருத்தி செய்து, சுகாதாரமான இடத்தில் கன்று ஈனச்செய்வதன் மூலம் அவற்றின் கருப்பையில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* மாடுகளுக்கு சினை ஊசி போட்டு 60-90 நாள் கழித்து கால்நடை மருத்துவர் மூலம் சினைப்பரிசோதனை செய்து மாடுகள் சினையாக இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் .

* மாடுகள் கருவுற்று இருந்தால், பின்னர் மாடுகள் சினைப்பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தாது. பசுவுக்கு சினைக்காலம் 280 நாட்கள், எருமை மாட்டிற்கு 300 நாட்கள்.

* சினைக்காலத்தின் கடைசி கட்டத்தில் தேவையற்ற அயற்சிகள் மற்றும் ஓரிடத்திலிருந்து மாடுகளை மற்றொரு இடத்திற்கு ஓட்டிச்செல்லுதல் கூடாது.

* மற்ற மாடுகளிலிருந்து சினையுற்ற மாடுகளை தனியாக பிரித்தது வைத்து நன்றாக தீவனமளித்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும்.

* கன்று பிறப்பதற்கு இரண்டு மாதத்திற்கு முன் பால் கறப்பதை நிறுத்தி போதுமான தீவனம் மற்றும் உடற்பயிற்சி அளிக்க வேண்டும். இதனால் சினை மாட்டின் உடல் நலம் பராமரிக்கப்படுவதுடன், சரியான உடல் எடையில் நலமான கன்று ஈனுதல், குறைந்த நோய் தொற்று போன்ற நன்மைகளும் கிடைக்கும். இதனுடன் கன்று ஈன்ற பின்பு மாடுகள் விரைவில் சினைப்பருவ சுழற்சியினை அடைவதற்கும் வழிவகுக்கும்.

* கறவை மாடு கன்று ஈன்று அடுத்த 4 மாதங்களில் அல்லது 120 நாட்களில் மீண்டும் சினைஊசி போடுதல் அல்லது காளையுடன் சேர்த்தல் போன்ற முறைகளின் மூலம் இனப்பெருக்கத்திற்கு அவற்றை உட்படுத்தலாம். இதனால் ஒரு வருடத்திற்கு ஒரு கன்று என்ற இலாபகரமான பால்பண்ணைத் தொழிலை நடத்தலாம்.