Tuesday 18 September 2018

இயற்கை விவசாயம் பற்றி படித்து தெரிந்து கொண்ட செய்திகள் . உங்களுக்கும் பிடிக்கும் !

ஒரு ஏக்கருக்கு உரமாக தெளிக்க, 10 கிலோ வேப்பம் புண்ணாக்குயை 10 லிட்டர் கோமியத்தில் அரை கிலோ கழிவு பெருங்காயத்தோடு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உபயோகிக்கவேண்டும்.புளிப்பொட்டை வயலில் இட்டால் கோரைப்புல் வராது.1 லிட்டர் வேப்ப எண்ணெயில், 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணியை 3 நாட்கள் ஈரம் காயாமல், ஈர சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து, பின் 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் அனைத்து வித சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல்  சேர்த்து, அதிகாலை வேளையில் தூவினால் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.



பூண்டானது எல்லாவித செடிகளில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் நூற்புழுவை எதிர்த்து திறமாக செயல்படக்கூடியது. அதை தனியாகவோ அல்லது வேம்பு பொருட்கள், மிளகாய், பெருங்காயம் மற்றவையோடு கலந்து பயன்படுத்தலாம்.

கரையான் தாக்கப்பட்ட பகுதிகளின் எருக்களை இலைச்சாற்றை பயன்படுத்தலாம்.வளமற்ற மண்ணாக இருந்தால் அப்பகுதி நிலங்களை எல்லாம் கூட்டாக செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.ஆறுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் குறைந்த மகசூலே கிடைக்கும்.வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் நன்செய் நிலத்திலும், மலை அடிவாரத்தில் இருக்கும் வறண்ட நிலத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.சரிவின் குறுக்கே வயல்களில் கல்தூண் அமைத்தால், மண் சரிவையும் ஈரப்பதத்தையும் காக்கலாம்.‘வெட்டிவேர்’ புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச்சுற்றி நட்டால் மண் அரிப்பை தடுக்கலாம்.வயல் வரப்புகளில் நிரந்தரமாக ஏதாவது தாவரங்களை வளர்த்து வந்தால் அதிக மண் அரிப்பைக் குறைக்கலாம்.புதிய தோட்டாக்கால்கள் பழைய நிலம் அதிக மகசூல் கிடைக்கும்.



தோட்டக்காலப் பயிரைக்காட்டிலும் பயிருக்கு அதிகக் கவனம் தேவை.தண்ணீர் தேங்கக்கூடிய வறண்ட பகுதி சாகுபடிக்கு ஏற்றதல்ல.மண் வகையே, சாகுபடி பயிரை தீர்மானம் செய்யும்.செம்மண் தொடர்ந்து பயிர் செய்ய ஏற்றது.செம்மண்ணை விட கரும்மண் அதிகமாக நீர் பிடித்து வைத்திருக்கும் திறன் உள்ளது.மணல் கலந்து மண் அநேக பயிர்கள் சாகுபடி செய்ய உகந்ததல்ல.அதிகமாக தொழு உரம் இட்டால் மண் நயம் கூடும்.குளத்து மண் இட்டால் மண் நயம் கூடும்.அங்கக உரம், அனங்கக உரம் இடுவது, மண் தன்மையைச் சார்ந்தது.மழை பெய்தவுடன் களை அதிகமாக முளைத்தால், அது நல்ல மண் வளத்தைக் கொண்டு உள்ளதையே காட்டும்.ஆடு தின்னாப்பாலை நிலத்தில் வளர்த்தால், அது குறைந்த மண் வளத்தையே காட்டும்.செம்மண்ணை கரும்மண் நிலத்திலோ இல்லை மாற்றியோ இட்டால் மண் வளம் அதிகரிக்கும்.

கோடைக்காலத்தில் ஆடுகிடையோ, மாட்டுக்கிடையோ அமர்த்தினால் மண் வளம் கூடும்.மழையில்லா வறண்ட பகுதிகளின் மண் வளத்தைக் காக்க, பயிறு வகைப் பயிர்களை கலப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ பயிரிட வேண்டும்.மண் அரிப்பு தடுக்கவும் மண்வளத்தை மேம்படுத்தவும், மண் சரிவுப் பகுதியில் பழ மரங்களுக்கு இடையே கொழிஞ்சியை பயிரிடவேண்டும்.



‘நுணா’ மரம் இருந்தால், அதிக ஈரப்பதம் அம்மண்ணில் உள்ளதை அறியலாம்.கோடைக்காலத்தில், ஆழ உழவு செய்தால் மண் ஈரப்பதத்தை காக்கலாம்.மண்ணை நன்கு உழவு செய்து தூள் தூளாக்கினால், அதிக ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.செம்மண் நிலத்தில் கரும்மண் குளத்து மண்ணை இட்டால் நீர்ப்பிடிப்பு தன்மையை செம்மண் பகுதியில் அதிகரிக்கலாம்.

சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு செடியைப் பயிரிட்டு, பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.எந்தவொரு நிலத்திற்கும், நாம் நடந்தால் நம் கால் தடம் பதியாமல் இருந்த அந்த சமயத்தில் நீர்ப்பாசனம் செய்தால் போதும்.

கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால், நீரானது ஆவியாக மாறி வீணாவது தடுக்கப்படும்.

நன்செய் நிலத்தில், ‘ஆரை’ கீரைக் கிளையும், தோட்டக்கால் நிலத்தில் ‘அருகு’ புல்லும் இருந்தால் நல்ல மகசூல் கொடுக்கும்.

செம்மண் நிலத்தில் ‘அருகு’, ‘கரும்மண்’ நிலத்தில் ‘கோரையும்’ இருந்தால் அந்நிலம் நல்ல நிலம்.

களர் நிலத்தை சரி செய்ய சணப்புப் பயிரை விதைத்து அதை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் போதும்.களர் நிலத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டை பயிரிட்டு, அது பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்யவேண்டும்.களர் நிலத்தை சரிசெய்ய பிரண்டையை இடலாம்.களர்நிலத்தில் வேப்பந்தழை இட்டால் சரியாகும்.உப்புநிலத்தை சரிசெய்ய வேப்பங்கொட்டை மேல் தோலை இடலாம்.வேப்பம் புண்ணாக்கு இட்டால் உவர் தன்மை சரியாகும்.

பனை மரத்தின் ஓலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அதிகளவு நிலத்தில் இட்டால் களர் தன்மை சரியாகிவிடும்.புங்கம் இலையையோ, புளியம்பழத்தின் மேற்தோலையோ இட்டால் களர் நிலம் நல்ல நிலமாக மாறும்.மட்கு உரத்துடன் தென்னை நார்க்கழிவை கலந்து இட்டால் களர் தன்மை மாறும். கரும்பாலை கழிவு, நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவு ஆகியவற்றை நிலத்தில் போட்டால் களர் தன்மை மாறும்.அரை நெல்லிக்காய் கிளைகளை கிணற்றில் இட்டால் உப்புத் தன்மையான நீர் நல்ல நீராக மாறும்.



Sunday 9 September 2018

தொல்லுயிர் கரைசல்

நுண்ணுயிர் கரைசல் என்பது ஜீவாமிர்தத்துக்கு தமிழ் பெயர் என்பது நமக்கு தெரியும். 
தொல்லுயிர் கரைசல் என்று ஒன்றும் உண்டு. அது என்னங்க?!

இது குறித்த செய்தி திரு சுந்தரராம ஐயர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

இதை உருவாக்கியவர் திரு நம்மாழ்வார் அவர்களின் மூத்த சகோதரர். 
இயற்கை இடுபொருள்களில் நேரடியாக பயிருக்கு பயன்படுவது இது ஒன்று தான். 
இதை தயாரிக்கும் முறையை திரு சுந்தரராம ஐயர் சொன்னபடி கொடுக்கிறேன்.

தயாரிப்பு முறை:
தேவையான பொருட்கள். 
1. புதிய சாணம் 5 கிலோ, 
2. நாட்டுசர்க்கரை 3/4 கிலோ, 
3. கடுக்காய் பொடி 25 கிராம்,
4, அதிமதுரம் 2 1/2 கிராம். 
இத்துடன் 50 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் ஒன்று.




டிரமில் சாணத்தை நீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். 
பின்னர் சர்க்கரையை சேர்த்துக கொள்ளுங்கள். 
கடுக்காய் பொடியையும், அதிமதுரப்பொடியையும் அதில் கலந்து பின் டிரம் வழியும் வரையில் நீர் நிரப்புங்கள்.
இது முக்கியம்.
பின்னர் மூடியைக்கொண்டு காற்று புகாவண்ணம் டைட்டாக மூடிவிடுங்கள். 
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மூடியை திறந்து உள்ளே இருக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றி மீண்டும் மூடி வையுங்கள். 
10 நாட்கள் கழித்து மூடியை திறந்து பின் வேறொரு டிரம்மில் நன்றாக காற்று படும்படியாக மெதுவாக ஊற்றுங்கள். 
இப்போது தொல்லுயிர் கரைசல் தயார்.

இதை பாசனநீரில்கலந்து விடலாம். 1:10 என்ற விகிதத்தில் பயிர்கள் மீது தெளிக்கலாம். இது செய்த மறுநாளே பயிர்கள் நன்றாக பச்சை எடுத்து இருக்கும். 
இது ஒன்றே பயிருக்கு உடனடியாக உணவாக மாறும் என்று அவர் கூறினார். 
இது எப்படி உடனடியாக உணவாகிறது என்பதற்கான விளக்கமும் கொடுத்தார். 
அதன் சாரம் இதோ.

சாணத்தில் இருக்கும் நுண்ணுயிர்களில் சில காற்று இருந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும், அதுபோலவே சில நுண்ணுயிர்கள் காற்று இல்லாமல் இருந்தால்தான் உயிர் வாழும். இந்த அடிப்படையில் தான் தொல்லுயிர்கரைசல் தயாரிக்கப் படுகிறது. 
டிரம் வழியும் வரை நீர் நிரப்பி மூடிவைப்பதால் டிரம்மில் காற்று இருக்காது. 
இந்த பத்து நாட்களில் காற்று இல்லாமல் வாழ இயலாத நுண்ணுயிர்கள் மடிந்து அடுத்த வகை நுண்ணுயிர்களுக்கு உணவாகி விடும். பத்து நாட்கள் கழித்து டிரம்மில் உள்ள நுண்ணுயிர்கள் அனைத்துமே காற்றில்லாமல் உயிர் வாழக்கூடுயவைகள் மட்டுமே. 
இப்போது அதை வேறு டிரம்மில் காற்று படும்படியாக ஊற்றும் போது அவைகளையும் மடிந்து விடும். 
இதன் பின் டிரம்மில் இருப்பது நல்ல சத்தான கரைசல் மட்டுமே.
அதனால் தான் இது உடனடியாக பயிருக்கு பயன்படுகிறது. 
இது தான் நான் அவர் உரையிலிருந்து புரிந்து கொண்டது.
இது உங்களுக்கும் பயன்படக்கூடும். 
வாழ்த்துகள்.


Tuesday 24 July 2018

Anthiyur Gurunathaswamy Cattle Fair is to be held from August 8 to August 12.

It isn't just the temple car celebration of Arulmigu Gurunathaswamy temple at Pudupalayam, close Anthiyur, that draws in a large number of aficionados consistently, yet in addition the many impermanent shops lining on both the sides of the street for more than three kilometers, show of indigenous type of bovines and steeds at the cattle celebration which raises the festive mood of the devotees. 

Anthiyur is the name of the pony(horse) market from Tipu Sultan. Here is the yearly celebration of the period of Gurunatha Swamy Temple. 

It is the biggest steed showcase in Anthiyur which is situated in the Erode area of the Erode region. 

Along these lines, the yearly market for the long stretch of Aadi is a perfect place for horse darlings and the individuals who wish to purchase regular cows. 

Visit the place with family and people who will buy dairy animals, bulls, steeds(horse), calves and so on.

Click on the Direction to drive:

Tuesday 17 July 2018

Agri Expo @ Dharmapuri


Saturday 12 May 2018

மாடு சினை நிற்க இயற்கை மருத்துவம்

சினை நிற்காமல் போன கால்நடைகள் சினை நிற்க இயற்கை மருத்துவம்.

இன்னைக்கு இருக்குற அவசர உலகத்துல மாடு சினைநிக்கலைனா உடனே விற்க போயிடுறோம். அது என்ன பண்ணும் பாவம், எல்லாமே இரசாயனம் தெளிச்ச தீணி தான் போடுறோம், தீவணம் ன்னு வெளிய பெருக்கான் கழிவு மாறி எதையோ வாங்கி போடுறோம், அதெல்லாம் எதுல செய்யுறாங்க என்னென்னா கூட சேர்க்குறாங்க ன்னு நிஜமா நமக்கு தெரியுமா? பண்றதெல்லாம் தப்பு நாம தான், இதனால தான் மாட்டுக்கு தற்காலிக மலட்டுத்தன்மை வருது. இன்னைக்கு இருக்குற நிலைல தீணி பெரும் பாடு தான்.இருந்தாலும் புதுசா கறவை மாடு வாங்குறதுக்கு கொஞ்ச காலம் தட்ட போட்டு மாட்டை இந்த சிகிச்சையை செஞ்சு அதோட தற்காலிக மலட்டு தன்மையை சரி செஞ்சுரலாம்.

தேவையான பொருட்கள்: 

1. வெள்ளை முள்ளங்கி.

2.. கற்றாளை துண்டு

3. முருங்கை இலை

4. பிரண்டை (தண்டு)

5. கறிவேப்பிலை

6. மஞ்சள் கிழங்கு

சிகிச்சை அளிக்க வேண்டிய நெறிமுறைகள்:

சினை நிற்கவில்லை என்று உறுதியாக தெரிந்ததும், அன்றிலிருந்தோ அல்லது அடுத்த நாள் முதலோ சிகிச்சையை துவங்க வேண்டும்.

1. முதல் ஐந்து நாட்களுக்கு தினமும் ஒரு வேலை முழு வெள்ளை முள்ளங்கியை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். (நாள் 1 -5)

2. அடுத்த ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதவாது ஒன்பதாவது நாள் வரை, கற்றாழையை முட்களை சீவிவிட்டு, தினமும் ஒரு வேலை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 6 -9)

3. அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் பதிமூன்றாவது நாள் வரை , நான்கு கை அளவு அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 10 -13)

4. அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த பிரண்டையை ( தண்டு மட்டும்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 14 -17)

5. இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்கு நான்கு கை அளவு அப்போது பறித்த கறிவேப்பிலை உடன் மஞ்சள் ஒரு ஓரிரு கிழங்கு (பெரியாத இருப்பின் ஒன்று, சிறியது எனில் இரண்டு, கடையில்வாங்கிய பொடியை எக்காரணம் கொண்டும் உபயோகிக்க வேண்டாம்) வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பும் தடவி கொடுக்கவும். ( நாள் 18 -21).

மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே கொடுக்க வேண்டும், நேரடியாக உண்ண கொடுக்க வேண்டும். கட்டாயம் மாடு சினை நிற்கும், இல்லை எனில் மேலும் ஒரு முறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்கு பிறகு தொடரவும். கட்டாயம் மலடு நீங்கி சினை நிற்கும்.

கால்நடை மருத்துவர் , பேராசிரியர் திரு.புண்ணியமூர்த்தி அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறை.


Tuesday 8 May 2018

HOMEOPATHIC TREATMENT OF TEAT FIBROSIS IN DAIRY CATTLE

INTRODUCTION

Teat fibrosis, a common sequel of mastitis develops so gradually that it may escape observation until most of the secretary tissues are destroyed. Fibrosis may be diffused, involving whole quarter or local varying in size from pea like lesion to bigger masses near the base or tip of the teat (Blood et al 2006). Fibrosed mastitic cows do not usually respond to conventional antibiotic therapy and the affected quarter is ultimately rendered non functional resulting in a considerable economic loss to cattle owners. 

oral administration of Homeopathic medicines, Silicea 200C and Calcaria Flour 200 C for a period of 20 to 40 days in    dairy cows affected with mastitis having symptoms of fibrosis in udder shows very good result in restoring it in normal condition.

2ml of Calcaria Flour-200C in 100 ml of Luke warm water is  administered orally thrice a day to each animal. Silicea -200C is  also administered in same dose and route keeping a time gap of half an hour between two administrations treatment regime is continued for 40 days .

Calcaria flour is known for its ability to eliminate fibrosis (Edwad, 2002). Silicea stimulates expulsion of foreign body from tissues in chronic low grade inflammatory lesions (Day, 1992) (Shah, 2003). Calcaria flour and Silicea was found highly effective in chronic cases of fibrosed mastitis by Upadhyay et al., 1995; Upadyay and Sharma, 1999 and Singh et al. 2006. In light of these reports and present observation it can be inferred that combination of homeopathic medicines, Silicea and Calcaria flour can be effectively used in the treatment of fibrosed mastitis in cows. Although the course of treatment is protracted yet it is safe and cost effective.

by Dr Rajesh Kumar Singh