Sunday 23 June 2019

இயற்கை களைக் கொல்லி - ஒரு விவசாயின் அனுபவம்

இயற்கை களைக்கொல்லி தயார்
******************************************

நீண்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றி ..
இது விவசாயிகளுக்கு வரபிரசாதம் என்றுகூட சொல்லலாம்..
ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,
மனித உடலும் மலடாகிவிடுகிறது..

இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்தேன்..



முகநூலில் பல நண்பர்கள் மாட்டு கோமியம் தெளித்தால் களைச்செடி கருகி விடுகிறது என்று கூறினர்..
முயற்சித்தேன் களைமுளைவிடும் போது..
ஆனால் பலனலிக்கவில்லை..
சரி வெறும் கோமியம் மட்டும் தெளித்தால் களை கருகாது என்று சிறிது கல் உப்பை சேர்த்தேன்..

களை கருகவில்லை..
எலுமிச்சபழத்தை சேர்த்தேன் பலனில்லை..


"இதனுடன் வேப்பெண்ணெய் சேர்த்தேன் களைச்செடி கருகியது"
சரி என்று கடந்த மாதம் எனது வாழை காட்டில் தெளித்து பார்த்தேன்.
களைச்செடி கருகி வாழை கருகரு என்று வளர்ந்தது..
சரி இனி நாம் சின்ன டிராக்டரை விட்டு களைச்செடிகளை அழிக்க தேவை இல்லை என்று முடிவு செய்தேன்..
என்னிடம் இருப்பது இரண்டு நாட்டு மாடு..
பயிருக்கு உரத்தேவையை இந்த இரண்டு மாடுகளே பூர்த்தி செய்கிறது.
இது சராசரியாக தினமும் பத்து லிட்டர் கோமியம் கிடைப்பதே சிரமமாக இருந்தது
(12 மணி நேரத்தில்)

ஆனால் களைக்கொல்லிக்கு நாம் இந்த கோமியத்தை பயன்படுத்தினால் வாழைக்கு நீருடன் கலந்து விட பற்றாகுறை ஆகிவிடுமே என்று யோசித்தேன்..
தீவிரமாக யோசித்தேன்..
ஒரு யோசனை வந்தது..
நாம் ஏன் இந்த 
வாழையின் பக்க கன்றுகளையும்,
வாழை பூவையும் மாட்டுக்கு போட்டால் 
கோமியம் அதிகமாக கிடைக்குமே என்று ..

வீனாக போன பக்க கற்றுகளையும் வாழை பூவையும் மாட்டிற்கு போட்டேன் 
கைமேல் பலன் கிடைத்தது.
சராசரியாக நாள் ஒன்றிற்கு இருபது லிட்டர் கோமியம் கிடைத்தது இரண்டு மாடுகளிடமிருந்து..
அப்படியே சேகரித்தேன் ஒரு மாதம்..
நானூறு லிட்டர் கோமியம் கிடைத்தது..
நிம்மதி பெருமூச்சு விட்டேன்..


செய்முறை விளக்கம்..
*************************

நீர்கலக்காத மாட்டு கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு..

முளைத்த களைச்செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு ..

களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை பத்து லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும்..

பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்..

அதனுடன் வேப்ப எண்ணை நூறு மில்லியை இதனுடன் ஊற்றி கலக்கவும்..

பிறகு வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும்..

(பயிருக்கு படாமல்)

அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து களைச்செடிகளும் கருகிவிடும் பார்த்தீனிய உட்பட கோரை, அறுகம்புல் தவிர..

இந்த களைக்கொல்லி பயிருக்கு எந்த தீங்கும் தருவதில்லை,

காரணம் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததது..

வேப்ப எண்ணை தொடர்ந்து பயன்படுத்தினால் கோரை கிழங்கு கூட அழிந்து விடும்..

கல் உப்பு ஒரு கிலோ என்பதால் மண்ணை பாதிப்பது இல்லை..

இதை நீங்கள் செய்ய குறைந்த செலவே ஆகிறது..

அந்த காலத்தில் வேப்பமரத்தில் செய்த கலப்பையை கொண்டு நம் பாட்டன் பூட்டன் உழுதததால் கோரை விவசாய பூமியில் இல்லாமல் போனது..

பச்சை புரட்சி என்ற பெயரில் மரக்கலப்பை இரும்பு கலப்பை ஆன பின்பே கோரைக்கிழுங்கு நம் பூமிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை தந்தது..

ஒரு டேங்க் இயற்கை களைக்கொல்லி தயாரிக்க ஆகும் செலவு,

கல் உப்பு ஒரு கிலோ 3 ரூபாய்

எலுமிச்சை பழம் 3 ரூபாய்

வேப்ப எண்ணை 100Ml 12 ரூபாய்
ஆக மொத்தம் 18 ரூபாய்


No comments:

Post a Comment