Friday 12 December 2014

நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவை என்னென்ன ?

நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவை என்னென்ன ? (இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் இயற்கைக்கு மாறவிரும்பும் விவசாயிகள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்)
பசுவின் குடலில், தொடர்ந்து நல்ல எதிர்உயிர் முறிகள் உருவாகின்றன. இவை, பசு வெளியிடும் பால், சாணி, மூத்திரம் போன்றவகைகளுக்கு வலிமைதரும் மிக முக்கிய பொருட்களாகிவிடும். இந்த நல்லா எதிர் முறி உருவாக்கங்களுக்கு, சில பாக்டிரியா சிற்றினங்கள் பொறுப்பு உடையவைகளாக உள்ளன. லேக்டோ பேசிலஸ், பயோஃபீடோ பாக்டிரியம், ஸ்டீரெப்டோ காக்கஸ், எண்ட்ரோ காக்கஸ், லீயுகான்ஸ்டக், பிடியோகாக்கஸ், ஈஸ்ட், கல்சர்கள், அஸ்பர் ஜின்னஸ் போன்ற பக்டீரியங்களாகும். 
பசுவின் குடலில், நுண்ணுயிர்கள் சிறப்பான குடல் சூழல் சமநிலையை உருவாகுகின்றன. நிலையான நுண்ணுயிர்கள், நிலையையற்ற நுண்ணுயிர்கள், உமிழ்நீர், மிடற்றுச்சுரப்பு, கனையச்சுரப்பு கல்லீரல், முன்சிறுகுடல் சுரப்புகள், வெளியேறு கரைசல்கள், யூரியா, நிலையான புரதங்கள் போன்றவைகலும், குடல் அமைவில் கலந்துள்ள மீதி எண்ணற்ற பொருட்களும் உள்ளடங்கி உள்ளன. 
அது போன்றே நாட்டு பசுவின் குடலிலும் செயல்பாடுமிக்க நுண்உயிர் குடியிருப்புகள் பல்கி உள்ளன. அவை உடம்பில் நோய் தடுப்பு ஆற்றலை உருவாக்குபவை. இந்த நுண் உயிர்களில் லாக்டிக் அமில பாக்டீரியாவும், லேக்டோ அமில பாக்டீரியாவும் மிக முக்கியமானவையாகும். எல்லா நுண் உயிர்களும் எதிர்ப்பாற்றல் பொருட்களான, தொல்லை தரும் நொதிகள், அமிலங்கள், கணையசுரப்பு, பித்தசுரப்பு இவற்றில் துடிப்புடன் இருக்கும். இது பசுவின் குடலின் தனித்தன்மையாகும்.
நீங்கள் பசுமாட்டுக் காலண்டரைப் பார்த்தால், அதன் உடலினுள் முப்பது முக்கோடி தேவர்கள் இருப்பதாக எழுதப்பட்டிருக்கும் உண்மையில் அவர்கள் தேவர் அல்லர். அவை, முப்பத்துமுக்கோடி முயற்சிமிக்க நன்மை தரும் நுண்ணுயிர்களில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண் உயிர்கள், ரைசோபியம், அசிடோ பேக்டர், அசோஸ் பயிரில்லம், பீஜர்யின்கியா போன்ற நைட்ரஜன் நிலைபடுத்திகள் பலவும், பிஎஸ்பி என்னும் பாஸ்பேட் கரைப்பு பக்டீரியாக்களும், பொட்டாஸ் கரைக்கும், பேசில்லஸ் கைலிகஸ்சஸ் போன்றவையும், சல்பர் கரைக்கும் தை ஆக்சிடன்டுகள் பலவும், ஃபெரஸ் பாக்டீரியாவும், கிடைக்காத ( முயற்சி மிக்க நுண் உயிர் ) மிகப்பல டிஜெக்டர் பெப்டிக் பாக்டீரியா சிற்றின வகைகளும், பலகோடி நன்மையும் முயற்சியும் மிக்க பாக்டீரிய வகைகளும், பூஞ்சானவகைகளும், ஆக்டினோமைசிடாஸ் போன்ற பிற நுண்னுயிர்களும் உள்ளன. 
பசு மாட்டுச் சாணத்தின் நன்மைதரும் கோடிகணக்கான நுண்ணுயிர்களால் நாம் வறுமையின் பிடியில் இருந்து வளமான வாழ்வை நோக்கி செல்லும்படி நம் விதியை கடவுள் விதித்துள்ளார். ஒரு கிராம் பசு மாட்டு சாணியில் 3௦௦ லிருந்து 5௦௦ கோடி நன்மை தரும் முயற்சியும் கொண்ட நுண்ணுயிர்கள் உள்ளன. எந்த வகையான முயற்சிமிக்க நுண்ணுயிர்களையும் கொண்ட கரைசல்களையும் நாம் வாங்க வேண்டிய தேவையின்றி நாட்டுப் பசுமாட்டின் சாணி நுண் உயிர் வளர்ப்பு ஊக்கியாக உள்ளது. 
நீங்கள் 1௦ கிலோ பசுமாட்டின் சாணியை 2௦௦ லிட்டர் நீரில் மூத்திரத்துடன் கலந்து, வெல்லபாகும், பருப்புமாவும் சேர்த்து ஜீவாமிர்தத்தை தயாரித்தால் உண்மையில் 3௦லிருந்து 5௦ லட்சம் கோடிகள் அதாவது 3௦,௦௦௦,௦௦௦லிருந்து 5௦,௦௦௦,௦௦௦ மில்லியன் முயற்சிமிக்க நுண்ணுயிர்கள் அந்நீரில் உருவாகின்றன. ஒவ்வொரு 2௦ நிமிட இடைவெளியிலும் விரைவாக நுண்ணுயிர்கள் தங்களை பெருக்கிக்கொள்ளும். இரண்டு நாட்களில் இந்த ஜீவாமிர்தத்தில் முயற்சியும் நன்மையும் மிக்க நுண்ணுயிர்கள் கடல் போல் பெருகும்.- சுபாஷ் பாலேக்கர். 
நண்பர்களே நாம் விவசாயம் செய்வதற்கு நாட்டு மாட்டு சாணி,மூத்திரமே போதும் அதை கொண்டு நுண்ணுயிர்களை பெருக்கி நம் நிலத்திற்கு தேவையான உரங்களை செலவில்லாமல் உற்பத்தி செய்யலாம். இதை புரிந்து கொண்டால் மட்டுமே நம்மால் விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடியும்.

No comments:

Post a Comment