Sunday 25 January 2015

நெல் 11 ரகங்கள்!

அனந்தனூர் சன்னம் (120 நாட்கள்), காலா நமக் (120 நாட்கள்), தேங்காய்ப் பூ சம்பா (125 நாட்கள்), கருங்குறுவை (125 நாட்கள்), சேலம் சன்னா (145 நாட்கள்), சிகப்புக் கவுனி (140 நாட்கள்), கிச்சலிச் சம்பா (135 நாட்கள்), மாப்பிள்ளைச் சம்பா (160 நாட்கள்), அறுபதாம் குறுவை (60 முதல் 75 நாட்கள்), காட்டுயானம் (180 நாட்கள்), சொர்ணமசூரி (145 நாட்கள்)னு மொத்தம் 11 நெல் ரகங்கள....

தொடர்புக்கு, பவித்ரகுமார்,
செல்போன்: 9894114003

18 வகை நீரும்... பலா பலன்களும்!

1.மழைநீர், 2.ஆலங்கட்டிநீர், 3.பனிநீர், 4.ஆற்றுநீர், 5.ஊற்றுநீர், 6.பாறைநீர்,7.அருவிநீர், 8.அடவிநீர், 9.வயல்நீர்,  10.நண்டுக்குழிநீர், 11.குளத்துநீர், 12.ஏரிநீர், 13.சுனைநீர், 14.ஓடைநீர், 15.கிணற்றுநீர், 16.உப்புநீர், 17.சமுத்திரநீர், 18.இளநீர்... இதுதான் அவர் வகைப்படுத்தியிருக்கிற தண்ணீர்!
1. மழைநீர்
'சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட
போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு
விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ்
சிந்துமழை நீராற் றெளி.’
இந்தப் பாடலோட விளக்கத்தை கார்ப்பரேட் கம்பெனிக்காரன் படிச்சா... 'இயற்கை மழை நீர்’னு பாட்டில்ல அடைச்சு பணம் பண்ணினாலும் ஆச்சர்யப்பட முடியாது. அதாவது, மழை நீர் தான் உலகத்துல இருக்கிற தண்ணியிலேயே உயர்ந்தது. பூமியில வாழற எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்ச்சத்து மழை நீர்ல அடங்கியிருக்கு. இதைத் தொடர்ந்து குடிச்சு வந்தா... அறிவு விருத்தியாகும், உடல் சூடு நீங்கும்னு தேரையர் சொல்லியிருக்காரு. இந்தத் தண்ணியைத்தான், முதல் நீராவும் தொகுத்திருக்கார்.
2. ஆலங்கட்டிநீர்  
சில சமயம், மழை பெய்யும்போது, வானத்துல இருந்து பனிக்கட்டிங்க விழும். இந்த ஆலங்கட்டி நீரை, சேமிச்சு வெச்சு குடிச்சா... மேகம், பெரும்பாடு, கண்மாசி, காந்தல், விக்கல், சுவாச நோய்கள், மெய்மயக்கம் எல்லாம் நீங்கும்.
3. பனிநீர்  
அதிகாலை நேரத்துல, வெட்டவெளியில பாத்திரத்தை வெச்சா அதுல நீர் சேகரமாகியிருக் கும். இதுதான் பனிநீர். இதைத் தொடர்ந்து குடிச்சா... சொறி, சிரங்கு, குஷ்டம், தாபம், சயம், வாய்வு, முத்தோஷம், நீரிழிவு (சர்க்கரை நோய்தாங்க), அழல் கிராணி இப்படி பல நோய்ங்க காணாமப் போகும். இந்தப் பனிநீரை உடனே குடிக்கணும். காலம் தாழ்த்தி குடிச்சா, மருந்தா வேலை செய்யாம... பக்கவிளைவு வந்துடும். சர்க்கரை நோய்க்கு ஆயிரக்கணக்குல மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடறவங்க, பைசா செலவில்லாம கிடைக்குற பனிநீரையும் கவனிக்கலாம்.
4. ஆற்றுநீர்
ஆத்துத் தண்ணியில குளிச்சுட்டு வந்தா... உடம்புக்குப் புதுதெம்பு வந்த மாதிரி உணரலாம். அதுக்குக் காரணம், மலைப்பகுதியில இருந்து ஓடி வரும்போது, பல மூலிகைங்க மேல பட்டு அந்தத் தண்ணி ஓடிவரும். 'தம்பி, ஒவ்வொரு ஆத்துத் தண்ணிக்கும், ஒவ்வொரு வித குணம் உண்டுப்பா’னு சொல்லிட்டு, 'தினமும் ஆத்து நீரை குடிச்சா, குளிச்சா... வாதம், அனல், கபம், தாகம்.. நீங்கும். பொதுவா, நோய்க்கு வரவு சொல்லிக் கூப்பிடறது இந்த நாலு விஷயம்தான்’னு சொல்றாரு தேரையர். நம்ம முன்னோருங்க.. நோய் நொடியில்லாம, வாழ்ந்ததுக்கு ஆத்து நீரும்கூட ஒரு காரணமா இருந்திருக்கலாம்.
5. ஊற்றுநீர்
ஊத்துத் தண்ணியைக் குடிச்சா, பித்தமும் தாகமும் நீங்கும்.
6. பாறைநீர்
இதை... பாறைநீர், சுக்கான்பாறைநீர், கரும்பாறைநீர்னு மூணு வகையா பிரிக்கிறார். இதுல சாதாரண பாறைநீரைக் குடிச்சா... வாதம், கோபம், சுரம் உண்டாகும். சுக்கான் பாறைநீர் குடிச்சா.. நீர்க்கடுப்பு, நெஞ்சில் சீழ்க்கட்டுனு பலபிணிகளும், பித்தமும் வந்து சேரும். கடைசியா இருக்கிற கரும்பாறை நீர்தான் நல்லது. இந்த நீரைத் தொடர்ந்து குடிக்கும்போது வாந்தி, பெரும்பாடு, பித்தசுரம், மயக்கம், நீர்க்கடுப்பு, தாகம் எல்லாம் தீரும், உடலும் பளபளப்பாகும்.
7. அருவிநீர்
மேகம், ரத்தபித்தத்தையெல்லாம் நீக்கி, உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.
8. அடவிநீர்
காட்டுப்பகுதியில் தேங்கிக் கிடக்குற இந்த நீரைக் குடிச்சா, ஜலதோஷம், உடல் கனப்பு, இளைப்பு, தலைபாரம், சுரம் உண்டாகும்.
9. வயல்நீர்
மேகம், தாகம், வெட்டை, சுரம், கோபத்தை போக்கும். அத்தோட உடலுக்குக் குளிர்ச்சியையும் கொடுக்கும்.
10. நண்டுக்குழிநீர்
வாந்தி, தாகம், மாறாத விக்கல், காந்தல், தேக எரிச்சல் உள்ளவங்க, நண்டுக் குழிநீரைத் தேடித்தேடி குடிங்கனு தேரையர் சொல்றாரு.
11. குளத்துநீர்
குளத்துல வாழுற நீர்த் தாவரங்களைப் பொறுத்து, அந்த நீரோட குண இயல்புகள் மாறுபடும். தாமரை அதிகமா வளர்ந்திருக்கும் குளத்து நீரைக் குடிக்கிறவங்களுக்கு வாதம், பித்தம், வெக்கைநோய், தாகம் ஆகியவை உணடாகும். அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீர்... அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு உண்டாகும்.
12. ஏரிநீர்
இந்த நீர், வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்கும்.
13. சுனைநீர்
கல்லுங்க நிறைஞ்ச சுனைநீர், வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்கும். ஆனா, இந்த சுனைநீரை ஒருநாள் வெச்சிருந்து குடிச்சா, எந்தக் கெடுதலும் செய்யாது.
14. ஓடைநீர்
இதையும் சுவை அடிப்படையில ரெண்டு வகையா பிரிச்சிருக்காரு. ஒண்ணு துவர்ப்புச் சுவைநீர், ரெண்டாவது, இனிப்புநீர். இந்த இருவகையில் எதைக் குடிச்சாலும், தாகம் ஏற்படும். அதே நேரத்துல உடம்புக்கு பலமும் உண்டாகும்.
15. கிணற்றுநீர்
நிலவளத்தைப் பொறுத்து கிணற்றுநீரை ரெண்டு வகையா, பிரிக்கலாம். உவர்நீர் கிணறு, நன்னீர் கிணறு. இதுல ரெண்டு வகை நீரைக் குடிச்சாலும் தாகம், சூலை, சூடு நீங்கி, உடம்புக்கு வலு உண்டாகும். இத்தோட சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தமும் நீங்கும்.
16. உப்புநீர்
இதைக் குடிச்சா, குடல்வாதம் மறையும். அதேசமயம், நெஞ்செரிச்சல், பித்தம் உண்டாகும்.
17. சமுத்திரநீர்
கடல் நீரைக் காய்ச்சி குடிச்சா, தொழு நோய், உடல் கடுப்பு, குஷ்டம், நடுக்கு வாதம்,  பல்லிடுக்கு ரத்தம் கசிதல் நீங்கும்.
18. இளநீர்
இதைக் குடிச்சா... வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி, நீரடைப்பு நீங்கும். இத்தோட, மனதில் புத்துணர்ச்சி, பார்வையில தெளிவும், உடம்புக்குக் குளிர்ச்சியும் உருவாகும். எக்காரணம் கொண்டும், வெறும் வயித்துல இளநீரைக் குடிக்கக்கூடாது. குடிச்சா, வயிறு புண்ணாகிடும்.

நன்றி: பசுமை விகடன்

நோய்களும் தீர்வுகளும்! - டாக்டர் புண்ணியமூர்த்தி

வெள்ளாடுகளுக்கு வரும் முக்கியமான நோய்களுக்கான, இயற்கை முறை வைத்தியம் பற்றி தஞ்சாவூர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மரபுசார் மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் புண்ணியமூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே...
குடற்புழு நீக்கம்!
2 அங்குல நீள சோற்றுக் கற்றாழையில் முள்ளை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அப்படியே சாப்பிடக் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகளுக்கு ஓர் அங்குலம் போதுமானது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
பேன், உண்ணி நீங்க!
50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்து நசுக்கி... அதோடு நான்கு ஓமவள்ளி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, ஆட்டின் மேல் பூசி நன்கு காயவிட வேண்டும். பிறகு, தேங்காய் நாரால் பிரஷ் செய்து கழுவி விட வேண்டும். மழைக்காலம், ஈரப்பதமான சூழல்களில் இதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இந்த அளவு ஓர் ஆட்டுக்கானது.
வயிறு உப்புசம்!
வெற்றிலை-3, தரமான மிளகு-10, பெருங்காயம்-5 கிராம், இஞ்சி-50 கிராம், சீரகம் அரை ஸ்பூன் ஆகியவற்றை நன்றாக அரைத்து, நாட்டுச் சர்க்கரை-50 கிராம் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து... இரண்டு வேளை சாப்பிடக் கொடுக்க வேண்டும். இது ஓர் ஆட்டுக்கான அளவு.  
கோமாரி நோய்!
தலா ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து... அதோடு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடி தேங்காயைத் தனியாகத் துருவி அரைத்த கலவையோடு சேர்த்து, 50 கிராம் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து சாப்பிடக் கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் வராமல் தடுக்க ஒரு முறை கொடுத்தால் போதுமானது. நோய் வந்து விட்டதென்றால் தொடர்ந்து 5 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
சளித்தொல்லை!
துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி; ஆடாதொடா, தூதுவளை தலா ஒரு இலை; மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் ஆகியவற்றைக் அரைத்து... அதோடு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
தொடர்புக்கு: டாக்டர்.புண்ணியமூர்த்தி, செல்போன்: 9842455833
நன்றி: பசுமை விகடன்

Tuesday 20 January 2015

HOW TO COLLECT URINE FROM THE VEDIC COW – 8 important rules

HOW TO COLLECT URINE FROM THE VEDIC COW – 8 important rules
1. Cow should be pure Indian breed. To know more about Indian cow breeds please read: http://www.vishwagou.org/indiancowbreed.htm
2. Cows which graze naturally in open organic fields, preferably forest lands, are most suited. They get to eat the best of herbs and medicinal plants! Cows that are standing in or tied to, one place – their urine cannot be used for medicine purposes.
3. Urine should be collected ideally before sunrise, in a non-metallic vessal by hand. Fallen cow urine should not be used for consumption. Some school of thoughts say that cow urine is great for medicine, irrespective of the time it is collected.
4. Cow whose urine is being collected should be healthy. You should ensure that by physical examination and by touching the ears – usually cold ears & dry lips indicate that cow is unwell. Cows that stop eating food may also be ill.
5. If cow is pregnant – urine can be collected upto the 7th month but not thereafter until 2 months from delivery.
6. Days on which Sun is not visible and/or nights in which moon is not visible, there should not be any collection. Solar or Lunar eclipse should be avoided completely.
7. Age of the cow does not matter for collection. Of course, certain diseases may require urine from specific age, color or gender of cow. Consult your Ayurvedic doctor for details or write to gavyasiddha@gmail.com
8. Maintain the goodness by ensuring hygiene throughout and storage in a clean dry place. Collect it with a smile, it is indeed a precious gift!

Saturday 17 January 2015

துத்தி

உடலிலுள்ளபுண்களைஆற்றி, மலத்தை இளக்கி உடலைத் தேற்றுகிறது.


துத்தி இலையைக் கொண்டுவந்து மண் பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி நன்றாகவதக்கி கை பொருக்கும் சூட்டில் வாழை இலைஅல்லது பெரிய வெற்றிலையில் வைத்து கோவணம்கட்டுவது போன்று துணியைவைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இது போன்று தினசரி இரவு படுக்கைக்கு முன்னர் செய்து வந்தால் மூலவீக்கம், வலி, குத்தல், எரிச்சல் ரத்த மூலம், கீழ்மூலம்ஆகியவை நீங்கி நலம் உண்டாகும்.

துத்தி இலை வேர் முதலியவற்றை முறைப்படிகுடிநீரிட்டு பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வருபவர்கள்வாய் கொப்பளித்து வர ரத்தம் வடிவது நிற்கும்.

உடலில் ஏற்படும் வலிகளுக்கு துத்தி இலையைகொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து அந்நீரில்துணியை முக்கி ஒற்றடமிட்டு வந்தால் வலிகுணமாகும்.

கழிச்சல் இருப்பவர்கள் துத்தி இலையின் சாறுஇருபத்தினான்கு கிராம் நெய் பன்னிரண்டு கிராம்கலந்து உட்கொண்டு வந்தால் குணமாகும்.

ஆசன வாய்க் கடுப்பு, சூடு முதலியவற்றால்பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைக் குடிநீருடன்பாலும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டு வர நலம் தரும். மலத்தை இளக்கும்.

துத்தி இலையை பருப்புடன் சேர்த்து உண்டுவந்தால் மூலச்சூடு நீங்கும்.
எழிதில் பழுக்காத கட்டிகளின் மீது துத்தி இலையைஇடித்துப் பிழிந்த சாற்றை அரிசி மாவுடன் கலந்துகளியாகக்கிண்டி கட்டிகளின் மீது பூசி, கட்டிவந்தால் அவை எளிதில் பழுத்த உடையும்.

இரத்தவாந்தியால் துன்பப்படுபவர்கள் துத்திப்பூவை நன்கு உலரவைத்து சூரணம் செய்துதேவையான அளவு பாலும் கற்கண்டும்சேர்த்து அருந்தி வந்தால் ரத்த வாந்தி நின்றுஉடல் குளிர்ச்சியாகும். ஆண்மையையும்இது பெருக்கும்.

துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து சம அளவுசர்க்கரை கலந்து பசும் பாலுடன் அருந்தி வந்தால்நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய்இரத்த வாந்தி, முதலியவை குண்மாகும்.

துத்தி விதைகளைப் பொடித்து சர்கரையுடன்கலந்து இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறுமி.கி. அளவு உண்டு வந்தால் சரும நோய்கள்உடல் சூடு, தொழுநோய், கருமேகம், வெண்மேகம், மேகஅனல் முதலியவை கட்டுப்படும்.

வெள்ளைபடுதல் நோய், மூலம் உடையவர்கள்இதன் விதையைக் குடிநீர் செய்து முப்பது முதல்அறுபது மி.லி. அருந்தி வரலாம்.
துத்தி வேர் முப்பத்தயிந்து கிராம் திராட்சைப்பழம் பதினேழு கிராம் நீர் எழுநூறு மி.லிசேர்த்து நன்கு காச்சி நூற்று எழுபது மி.லிஆக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலைஇரு வேளையும் முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வந்தால் தாகம், நீரடைப்பு, மேகச்சூடு, முதலியவை குணமாகும்.

துத்தி விதைகளைப் பொடிசெய்து சம அளவுகற்கண்டுப் பொடிகலந்து அரை முதல் ஒரு கிராம் இரண்டு வேளை நெய்யுடன் குழைத்துஉண்டு வந்தால் வெண்புள்ளி நோய் குண்மாகும்.

துத்தி வேரை உலர்த்தி பொடி செய்து மூன்றுகிராம் முதல் ஐந்து கிராம் வீதம் தினமும்பாலில்சேர்த்துக் குடித்து வர மூலச் சூடுதணியும்.

வாயு சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய மலத்தினால்உண்டாகும் பூச்சிகள்ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோபொரியல்செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குண்மடையும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பைஒழுங்கு படுத்திக் கட்டிக் கொண்டு இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப்பூச அதன்மேல் துணியைச்சுற்றி அசையாமல்வைத்திருந்தால்வெகு விரைவில் முறிந்தஎலும்பு கூடி குணமாகும்.

துத்தி இலையை நன்றாக அரைத்துக் கசக்கிசாறு எடுத்துக்கொண்டு அந்தச்சாற்றுடன்தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும்அளவு நன்றாக க்காச்சி வடிகட்டிப் பாட்டிலில்வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்குதடவி வந்தால் இந்நோய் குணமாகும்.

குடற்புண்ணால் வேதனைபடுகின்றவர்கள் துத்தி கஷாயத்தை தினசரி மூன்று வேளை சர்கரை கலந்து குடித்து வந்தால் பூரண குணம்பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டை கம்மல்சொரிசிரங்கு உள்ளவர்கள்இந்தக் கஷாயத்தைக்குடித்து குணமடையலாம்.

அதிமதுரம்

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை இயற்க்கையின் வரம் எனலாம். இனி அதைப் பற்றி பார்ப்போம். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.
1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.
4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.
5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.
7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.
8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.
13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .
22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.
28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

சிறியா நங்கை

சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி... வீட்டை சுற்றி இந்த செடியை வளர்த்தால்... பாம்பு / பூரான் தொல்லைகள் இல்லை... நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று ......



றியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு... நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர் Andrographis paniculata. அதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி இருக்கும். பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. இந்தநிலையில் சாப்பாட்டை தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருக்கும். வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம். தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

Friday 16 January 2015

தென்னைக்கு இடையில் வாழை...

சாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்... என காசை இறைத்து விவசாயம் செய்து, கண்ணீரை அறுவடை செய்வது ஒரு ரகம். கழிவுகளை இறைத்து, இயற்கை விவசாயம் செய்து காசை அறுவடை செய்வது இரண்டாவது ரகம்! இதில், இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்... விசாககுமார். தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தென்னைக்கு ஊடுபயிராக பல ரக வாழைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-குளச்சல் சாலையில் ஆசாரிப்பள்ளம் என்ற ஊரிலிருந்து, இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பாம்பன்விளை. தென்னை, வாழைகளுக்கு மத்தியில் பசுமையாகக் காட்சியளிக்கிறது, விசாககுமாரின் இயற்கைத் தோட்டம். தோட்டப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள, உற்சாகமாய் பேசத் துவங்கினார்.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
''விவசாயம் எங்க குடும்பத்துக்கு பூர்விகத் தொழில், என் கூடப் பிறந்தவங்க எல்லாருமா சேர்ந்து விவசாயம் பண்ணிட்டு இருந்தோம். தனியா வீட்டு மொட்டை மாடியிலயும் தோட்டம் போட்டிருந்தேன். தோட்டத்தில் தெளிச்சது போக மிச்சமீதி இருக்குற ரசாயனத்தை வீட்டுத்தோட்டத்தில் தெளிப்பேன். இதைப் பார்த்த என் மனைவி சுஜாதாதான், 'ஏங்க இப்படி ரசாயனத்தை வாரி கொட்டுறீங்க. இது உடலுக்கும் கேடில்லையா?’னு அடிக்கடி கேப்பாங்க. அதனாலதான் இயற்கை விவசாயம் பத்துன தேடல் உருவாச்சு. அதை, 'யாருகிட்ட கத்துக்கிடறது?’னு குழம்பிட்டு இருந்தப்பதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. எதார்த்தமா ஒரு தடவை பஸ்ல போறப்போ படிக்கக் கிடைச்ச 'பசுமை விகடன்', இன்னிக்கு என் சுவாசமாவே மாறிப் போச்சு.
'பசுமை விகடன்' நடத்தின சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். தொடர்ந்து பசுமை விகடனைப் படிச்சுட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் புதுசா கத்துக்கிட்டேன். நாகர்கோவில்ல இருக்கற 'ரூரல் அப்லிஃப்ட் சென்டர்'லயும் இயற்கை விவசாயப் பயிற்சிகள் எடுத்தேன். 'என்னதான் பயிற்சி எடுத்துக்கிட்டாலும், அனுபவ அறிவும் வேணுமே’னு இயற்கைக்கு மாற தீர்மானிச்சேன். ஆனால், தொடக்கத்தில் கூட்டுக் குடும்பச் சொத்தா இருந்ததால, இயற்கைக்கு மாறணும்னு சொன்னதும், மத்தவங்கள்லாம் பயந்தாங்க. பாகப் பிரிவினை செஞ்சதும் என்னோட நாலு ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இப்ப முழுசா இயற்கை விவசாயத்துக்கு வந்து மூணு வருசமாச்சு'' என்று முன்னுரை கொடுத்த விசாககுமார், இயற்கை விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
''இந்த நாலு ஏக்கர்ல, மூன்றரை ஏக்கர்ல தென்னையும், அரை ஏக்கர்ல முந்திரியும் போட்டிருக்கேன். தென்னைக்கு ஊடுபயிரா மூணு ஏக்கர்ல மட்டும் வாழை சாகுபடி பண்றேன். இதுபோக என் தோட்டத்தில பப்பாளி-3, கிராம்பு-7, பலா-7, மா-7, தேக்கு-10, ஆரஞ்சு-2, சப்போட்டா-2 னு மரங்கள் இருக்கு. கொஞ்சம் பனை மரங்களும் நிக்குது. என் தோட்டத்து தென்னை மரங்களுக்கு
35 வயசு ஆகுது. 25 அடி இடைவெளியில மரங்கள் இருக்கறதால, செவ்வாழை, படத்தி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மட்டி, ஏத்தன், பூங்கதளி வாழை ரகங்களைப் போட்டிருக்கேன்.  
நீரை சிக்கனமாக்கும் கேணி!
வாழைக்கு எட்டு அடி முதல், பத்து அடி வரை இடைவெளி விட்டிருக்கேன். ரெண்டு தென்னைகளுக்கு மத்தியில (12 அடி இடைவெளியில்) மூணடி ஆழம், ஒன்றரை அடி அகலத்துக்கு கேணி (குழி) அமைச்சுருக்கேன். தென்னை ஓலை, மட்டைனு கழிவுகளை கேணிக்குள்ளே போட்டுடுவேன். இதனால, என்னதான் அடைமழை பெய்தாலும், ஒரு சொட்டுத் தண்ணிகூட தோட்டத்தை விட்டு வெளியே போகாது. கேணியில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மட்டும் தண்ணீர் விடுவேன். நல்லா வெயில் அடிக்கும்போது தென்னை மர ஓலையின் நிழல், எதுவரை படுதோ, அதுவரை வேர் விட்டிருக்கும். இதனால, பனிரெண்டு அடி தள்ளியிருந்தாலும், கேணியில் இருந்து, தென்னை தண்ணியை உறிஞ்சுக்குது.
இந்தக் கேணிகளுக்கு பக்கத்துலதான் வாழை இருக்கு. ஒரு ஏக்கர்னு பாத்தீங்கனா... 85 தென்னையும், 125 வாழையும் இருக்கும். தோட்டம் முழுக்க சொட்டுநீர்ப் பாசனம்தான். தென்னைக்குனு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்ல. வாழைக்கு மட்டும்தான் பராமரிப்பு. தென்னையில ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை காய் பறிப்போம். மூன்றரை ஏக்கர்ல ஒவ்வொரு வருஷமும் 3 ஆயிரம் காய்ல இருந்து 4 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்குது'' என்ற விசாககுமார், ஊடுபயிராக வாழை சாகுபடி பற்றி சொல்லத் தொடங்கினார்.
விதைநேர்த்தி முக்கியம்!
'வாழையில் எந்த ரகமாக இருந்தாலும், சாகுபடி காலம் வேண்டுமானால் மாறுமே தவிர, பராமரிப்பு ஒன்றுதான். 2 கிலோ தொழுவுரம், 16 லிட்டர் தண்ணீர், தலா 200 மில்லி சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து அதில் விதைக்கிழங்கை நனைத்து நடவு செய்ய வேண்டும். இந்த அளவு, 100 கிழங்குகளுக்கு சரியாக இருக்கும். நடவு செய்ததும், முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 3-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும்... 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
களைகளே மூடாக்கு!
15-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும் 20 கிலோ தொழுவுரம் போட்டு, சுற்றியுள்ள களைகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். இதேபோல் 3, 6, 9-ம் மாதங்களிலும் களைகளை வெட்டி தொழுவுரத்தைச் சேர்த்து மூடாக்கிட வேண்டும். 5-ம் மாத இறுதியில், ஒவ்வொரு கன்றுக்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி, தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குவதில்லை!
முழுக்க இயற்கை விவசாயம் என்பதால், பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இருக்காது. பழுப்பு நோய் சில நேரங்களில் எட்டிப் பாக்கும். இந்த நோய் தாக்கிய வாழையின் இலை பழுத்துப் போயிருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில்,
50 மில்லி புளித்த மோர் சேர்த்து விசைத் தெளிப்பான் மூலமாக மரம் முழுவதும் தெளிக்க வேண்டும். இதற்கும் மட்டுப்படாவிட்டால், அடுத்த 15-ம் நாளில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் கலந்து தெளிப்பான் மூலமாக தெளித்தால்... பழுப்பு நோய் காணாமல் போய்விடும்.

செவ்வாழையில் ஆப்பிள் நோய் தாக்கும். இந்த நோய் குலை போடுவதற்கு முன்பு வந்தால்... அந்த மரத்தில் குலை தள்ளாது. குலை தள்ளிய பின்பு வந்தால்... காய் சிறுத்து போய்விடும். செவ்வாழைப் பழமும் நிறம் மாறி விடும். இதனால், 40% அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். இலைகள் சிறுத்துப் போவதுதான் இந்த நோய்க்கான அறிகுறி. இந்த நோய், ரசாயன மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை. இலை சிறுத்ததுமே தலா 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, கலவையை வாழையின் தூரைச் சுற்றிப் போட்டு தண்ணீர்விட வேண்டும். அதில் மட்டுப்படாவிட்டால்... மீன் குணபம் (மீன் அமினோ அமிலம்) தயாரித்துத் தெளிக்கலாம். செவ்வாழை 10-ம் மாதத்தில் குலை தள்ளி, 12-ம் மாத இறுதியில் அறுவடைக்கு வரும். மற்ற ரகங்களைப் பொறுத்தவரை 9-ம் மாதத்தில் குலை தள்ளி, 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.
ஆண்டுக்கு ஆறு குலை!
சாகுபடிப் பாடம் முடித்த விசாககுமார், நிறைவாக, ''பொதுவா வாழைக்கு எட்டடி இடைவெளி இருந்தா போதும். படத்தி ரக வாழைக்கு மட்டும் 15 அடி இடைவெளி விட்டிருக்கேன். இதுல பக்கக் கன்னை வெட்ட மாட்டேன். ஒவ்வொரு வாழையில இருந்தும் எட்டு முதல் பத்து பக்கக் கன்னுகள் வரைக்கும் வரும். முதல் வாழையில் ஒன்பதாம் மாசம் குலை தள்ளும். அதிலிருந்து மூணு மாசத்துக்கு ஒரு முறைனு பக்கக் கன்னுகள்ல குலை வெட்டலாம். தார் கொஞ்சம் சிறுசா இருந்தாலும்... வருஷத்துல ஆறு தார் வரைக்கும் கிடைச்சுடும். ஒரு தார் 250 ரூபாய் வரைக்கும் விலை போகுது.
தார் வெட்டினதும், வாழையை அப்படியே விட்டுடுவேன். அது, தானா முறிஞ்சு கீழே விழுந்து மூடாக்காகிடும். என்னோட தோட்டத்து மகசூலுக்கு மூடாக்குதான் மூல மந்திரம். வாழை குலை தள்ளின உடனே, தோட்டத்துக்கே நேரடியா வந்து விலை பேசி, ஒப்பந்தம் போட்டுடறாங்க வியாபாரிங்க. செவ்வாழைக்கு எப்பவும் நல்ல விலை கிடைக்குது. ஒரு தார், 350 ரூபாயிலிருந்து
500 ரூபாய் வரைகூட விலை போகும். மத்த ரகங்கள்ல ஒரு தார் 300 ரூபாய்க்குக் குறையாம விலை போகும். எப்படிப் பார்த்தாலும்... லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும். மூணு ஏக்கர்ல ஊடுபயிரா போடுற வாழையிலயே இத்தனை லாபம்கிறது... சந்தோஷமான விஷயம்தானே'' என்றார் உற்சாகமாக.
மீன் அமினோ அமிலம்!
 மீன் அமினோ அமிலம் பயிர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய முக்கியமான கரைசல். இதை வயலில் தெளித்தால்,  பயிர்களெல்லாம் பசுமைக் கட்டி நிற்கும். இந்த மீன் அமினோ அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?  ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவு இவை இரண்டையும் ஒரு வாளியில போட்டு, காற்றுப் போகாத மாதிரி நல்லா மூடி வைக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து வாளியைத் திறந்து பார்த்தால், தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்தத் திரவத்திலிருந்து எந்தக் கெட்ட வாடையும் வீசாது. பழ வாசனை வரும். இப்படி வாசனை வீசினால், மீன் அமினோ அமிலம் நல்ல முறையில் தயாராகிஉள்ளதென புரிந்து கொள்ளலாம். நெல், வாழை, கரும்பு, காய்கறி பழங்கள்னு எல்லாவற்றுக்கும் இதை தெளிக்கலாம். இது மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கி. 10 லிட்டர் தண்ணிரில்
200 மில்லி அமினோ அமிலத்தைக் கலந்து தெளிக்கலாம். ஒரு தடவை தயாரித்த மீன் அமினோ அமிலத்தை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். நாய், பூனைனு வீட்டுல வளர்க்கிற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பத்திரமா வைக்க வேண்டும்.


நன்றி: பசுமை விகடன்