Wednesday 9 October 2013

காங்கேயம் காளைகள் (Kangayam)

ஆந்திராவில் சிறப்பு வாய்ந்த, "ஓங்கோல்" பசுவுக்கும், கர்நாடக மாநிலத்தில் சிறப்பு வாய்ந்த "ஹெலிகர்" இனக் காளைக்கும் பிறந்த கம்பீரமான இனமே, "காங்கேயம்" இனம். 

காங்கேயத்தில் இவை அதிகமாக வளர்க்கப்பட்டதால், இதற்கு இத்தகைய சிறப்பு பெயர் பெற்றது.மற்ற சாதாரண மாடுகளை விட, காங்கேயம் காளைகளின், முகத்தோற்றம், கொம்பு, கால், திமிழ், பல், தாடை, எலும்பு, தொப்புள், பின்புறம், வால் ஆகியவை மிடுக்காக இருப்பதால், தோற்றத்தில் காங்கேயம் காளைகள் மிரள வைக்கும்.ஆரம்ப காலத்தில் காங்கேயம் காளைகள் விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கி வந்தது. அதிக டன் வரை இழுவை திறன் கொண்டு, வலிமை உள்ளதாக விளங்கியதால், காங்கேயம் காளைகள், மாடுகளுக்கு நல்ல மவுசு ஏற்பட்டது.




No comments:

Post a Comment